ETV Bharat / state

ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற முதுகலைப் பட்டதாரி பெண்!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே முதுகலைப் பட்டதாரி பெண் ஒருவர் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

author img

By

Published : Jan 4, 2020, 9:58 AM IST

naagapattinam
naagapattinam

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 16 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் முதுகலைப் பட்டதாரி பெண் பிரியா (23) என்பவர் 204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற முதுகலைபட்டதாரி பெண் பிரியா

இதுகுறித்து பிரியா கூறுகையில், "எனது தாய்தந்தை அளித்த ஊக்கத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன். என்னை வெற்றிபெறச் செய்த கிராம மக்களுக்கு சேவை செய்வேன்.

மொத்தமுள்ள 54 ஊராட்சிகளில் மன்னம்பந்தல் ஊராட்சியை முதன்மையாக்கப் பாடுபடுவேன். அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்கள் வரை செல்ல உழைப்பேன்" என்றார். பிரியாவின் தந்தை பெரியசாமி, தாய் சசிகலா ஆகிய இருவரும் தனியார் கல்லூரி பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளை சேருங்கள்!’ - விவசாயிகள் கோரிக்கை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 16 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் முதுகலைப் பட்டதாரி பெண் பிரியா (23) என்பவர் 204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற முதுகலைபட்டதாரி பெண் பிரியா

இதுகுறித்து பிரியா கூறுகையில், "எனது தாய்தந்தை அளித்த ஊக்கத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன். என்னை வெற்றிபெறச் செய்த கிராம மக்களுக்கு சேவை செய்வேன்.

மொத்தமுள்ள 54 ஊராட்சிகளில் மன்னம்பந்தல் ஊராட்சியை முதன்மையாக்கப் பாடுபடுவேன். அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்கள் வரை செல்ல உழைப்பேன்" என்றார். பிரியாவின் தந்தை பெரியசாமி, தாய் சசிகலா ஆகிய இருவரும் தனியார் கல்லூரி பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளை சேருங்கள்!’ - விவசாயிகள் கோரிக்கை

Intro:மயிலாடுதுறை அருகே 23 வயதான முதுகலைபட்டதாரி செல்வி பிரியா மன்னம்பந்தல் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் வெற்றி: பொதுமக்கள் கொண்டாட்டம்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 16 நபர்கள் போட்டியிட்டனர். அதில் 23 வயது பிரியா என்ற முதுகலை பட்டதாரி பெண் 204 வாக்கு வித்தியாசத்தில வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராகி உள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் உடல்நிலை சரியில்லாததால் நேற்று வரை வெற்றி பெற்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை. பிரியாவின் தந்தை பெரியசாமி தாய் சசிகலா இருவரும் தனியார் கல்லூரியில் பணியாளர்களாக உள்ளனர். ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியா கூறுகையில் தன் தந்தை தாய் தந்த ஊக்கத்தில் இளம் வயதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தன்னை வெற்றிபெற செய்த மக்களுக்கு சேவை செய்வேன் என்றும், 54 ஊராட்சிகளில் மன்னம்பந்தல் ஊராட்சியை முதன்மையான கொண்டு வருவதற்கு பாடுபடுவேன் என்றும் அரசின் நல்ல திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை பயன்பெறும் வகையில் பாடுபடுவேன் என்று கூறினார். பிரியாவின் வெற்றியை அப்பகுதி மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்தும் இணிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பேட்டி: பிரியா வெற்றிபெற்ற வேட்பாளர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.