ETV Bharat / state

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய மீனவர்கள்!

author img

By

Published : Dec 13, 2019, 8:34 AM IST

நாகை: சீர்காழி அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்பு தெரிவித்துள்ளனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க மீனவர்கள் எதிர்பு
ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க மீனவர்கள் எதிர்பு


நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராம மக்கள், வட்டாட்சியர் சாந்தி, வருவாய்த் துறை அலுவலர்கள், ஓஎன்ஜிசி நிறுவன அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது எண்ணெய் எடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கிராம மக்களிடம் ஓஎன்ஜிசி நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவ கிராம மக்களின் கோரிக்கையை கேட்ட வட்டாட்சியர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க மீனவர்கள் எதிர்பு

அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் கூட்டத்தை தொடர்ந்தனர். அந்தக் கூட்டத்தில் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் அதனை ஏற்க மறுத்தால் 64 மீனவ கிராமங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதையும் படிங்க: மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து!


நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராம மக்கள், வட்டாட்சியர் சாந்தி, வருவாய்த் துறை அலுவலர்கள், ஓஎன்ஜிசி நிறுவன அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது எண்ணெய் எடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கிராம மக்களிடம் ஓஎன்ஜிசி நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவ கிராம மக்களின் கோரிக்கையை கேட்ட வட்டாட்சியர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க மீனவர்கள் எதிர்பு

அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் கூட்டத்தை தொடர்ந்தனர். அந்தக் கூட்டத்தில் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் அதனை ஏற்க மறுத்தால் 64 மீனவ கிராமங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதையும் படிங்க: மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து!

Intro:சீர்காழி அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க மீனவர்கள் எதிர்பு, கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் பரபரப்பு , 64 மீனவகிராமங்களை ஒன்றிணைத்து போராடப் போவதாக அறிவிப்பு :-Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கருத்துக்கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள்,வட்டாட்சியர் சாந்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஓஎன்ஜிசி நிறுவனம் என்னை எடுப்பது குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து கிராம மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஓஎன்ஜிசி நிறுவனம் தங்களது கிராமத்தில் என்னை எடுக்கும் பணியை மேற்கொண்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தங்களது கிராமத்தில் என்னை எடுப்பதற்கு உண்டான பணியை மேற்கொள்ளக் கூடாது எனவும் வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மீனவ கிராம மக்களின் கோரிக்கையை கேட்ட வட்டாட்சியர் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்து சென்றார். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் கூட்டத்தை தொடர்ந்தனர் அந்தக் கூட்டத்தில் தங்களது கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் என்னை எடுப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் அதனை ஏற்க மறுத்தால் 64 மீனவ கிராமங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். தொடுவாய் கிராமம் அருகிலேயே பழையபாளையம் என்ற இடத்தில் ஒன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொண்டுள்ளது அதனால் நிலத்தடி நீர் கருப்பாகமாறி பாதிக்கப்பட்டு அந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது தொடுவாய் மீனவகிராமத்தில் எண்ணெய் எடுப்பதற்கு உண்டான பணிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்க உள்ளது அப்பகுதி மீனவ மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க கூடிய திட்டங்களை மத்திய மாநில அரசுகள் தடைசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.