ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை கிழித்தெறிந்து போராட்டம்!

author img

By

Published : Oct 3, 2019, 4:38 AM IST

நாகை: மயிலாடுதுறையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

new-education-policy-draft-tear-by-protester-in-mayiladurai

மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

இதற்கு காவலர்கள் அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், மக்கள் அரசு கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியிலிருந்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு கிட்டப்பா அங்காடி நோக்கிச் சென்றனர்.

அவர்களை காவலர்கள் தடுத்தாலும், போராட்டக்காரர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை கிழித்து எறிந்தனர்.

புதிய கல்விக்கொள்கையின் வரைவு நகல் கிழித்தெறிந்து போராட்டம்

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதுகுறித்து தமிழர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த சுப்பு மகேஸ் தெரிவிக்கையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையானது குலக்கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும், சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய கல்வி உரிமையை பறிக்கும் வகையிலும் இருப்பதால் இந்தப் புதிய கல்விக்கொள்கையின் வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி பினு மீண்டும் கைது!

மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

இதற்கு காவலர்கள் அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், மக்கள் அரசு கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியிலிருந்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு கிட்டப்பா அங்காடி நோக்கிச் சென்றனர்.

அவர்களை காவலர்கள் தடுத்தாலும், போராட்டக்காரர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை கிழித்து எறிந்தனர்.

புதிய கல்விக்கொள்கையின் வரைவு நகல் கிழித்தெறிந்து போராட்டம்

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதுகுறித்து தமிழர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த சுப்பு மகேஸ் தெரிவிக்கையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையானது குலக்கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும், சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய கல்வி உரிமையை பறிக்கும் வகையிலும் இருப்பதால் இந்தப் புதிய கல்விக்கொள்கையின் வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி பினு மீண்டும் கைது!

Intro:மயிலாடுதுறையில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறிந்து திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம். 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்திற்கு, போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கூடிய திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையிலான போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா தலைமையில், தமிழர் உரிமை இயக்கம், மக்கள் அரசு கட்சி, ஏகாதிபத்திய இயக்கம் உள்ளிட்ட கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் இருந்து கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு, கிட்டப்பா அங்காடி நோக்கிச் சென்றனர். அவர்களை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்து எறிந்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர்.

பேட்டி: சுப்பு மகேஷ் - தமிழர் உரிமை இயக்கம்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.