ETV Bharat / state

ஐந்தாம் சுற்று ஏல அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம்

author img

By

Published : Jan 21, 2020, 11:44 AM IST

நாகப்பட்டினம்: ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஐந்தாம் சுற்று ஏல அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  த.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் த.ஜெயராமன் செய்தியாளார் சந்திப்பு மயிலாடுதுறை த.ஜெயராமன் செய்தியாளார் சந்திப்பு நாகப்பட்டினம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் விவகாரம் Nagappattinam T.JayaRaman Press Meet Mayiladurai T.JayaRaman Press Meet chief coordinator of the Anti-Methane Project Movement Nagapattinam hydrocarbon wells issue
Nagappattinam T.JayaRaman Press Meet

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தோழமை அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் கலந்து கொண்டு தலைமை வகித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசு ஜனவரி 15ஆம் தேதி ஐந்தாவது சுற்று ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஏலத்தில் காவிரிப்படுகையில் உள்ள புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் பகுதியின் கடற்பகுதியில் 4 ஆயிரத்து 64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கத் தரப்படுகிறது. இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் கடல் பகுதி, நிலப்பகுதி ஆகியவை மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறிவிடும்.

இதேபோல், கிழக்கு கடற்பகுதியில் மீன்கள் இல்லாத கடல் பகுதியாக மாறும், மீன் வளம் அழியும், மீன்கள் இப்பகுதியை விட்டு வெளியேறும். மீனவர்களின் மீன்பிடித் தொழில் அழிந்துபோகும். மேலும் ஏராளமான எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படுவதால் மீனவர்களின் படகுகள், கப்பல்கள் இப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்படாது.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006 இல் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க இனி சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் இல்லை என்றும், மக்களிடம் இனி கருத்து கேட்பு நடத்தத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

த.ஜெயராமன் செய்தியாளார் சந்திப்பு

இதைக் கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புக் கூட்டத்தில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழர் தன்மானப் பேரவை, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:

குரூப் 1 தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று தொடக்கம்..!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தோழமை அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் கலந்து கொண்டு தலைமை வகித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசு ஜனவரி 15ஆம் தேதி ஐந்தாவது சுற்று ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஏலத்தில் காவிரிப்படுகையில் உள்ள புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் பகுதியின் கடற்பகுதியில் 4 ஆயிரத்து 64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கத் தரப்படுகிறது. இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் கடல் பகுதி, நிலப்பகுதி ஆகியவை மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறிவிடும்.

இதேபோல், கிழக்கு கடற்பகுதியில் மீன்கள் இல்லாத கடல் பகுதியாக மாறும், மீன் வளம் அழியும், மீன்கள் இப்பகுதியை விட்டு வெளியேறும். மீனவர்களின் மீன்பிடித் தொழில் அழிந்துபோகும். மேலும் ஏராளமான எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படுவதால் மீனவர்களின் படகுகள், கப்பல்கள் இப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்படாது.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006 இல் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க இனி சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் இல்லை என்றும், மக்களிடம் இனி கருத்து கேட்பு நடத்தத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

த.ஜெயராமன் செய்தியாளார் சந்திப்பு

இதைக் கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புக் கூட்டத்தில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழர் தன்மானப் பேரவை, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:

குரூப் 1 தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று தொடக்கம்..!

Intro:ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஐந்தாம் சுற்று ஏல அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஜனவரி 27 ம் தேதி முதல் தொடர் போராட்டம். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் பேட்டி:-


Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தோழமை அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
இந்திய அரசு ஜனவரி 15ஆம் தேதி ஐந்தாவது சுற்று வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐந்தாம் சுற்று ஏலத்தில் காவிரிப்படுகையில் 4064 சதுர கிலோமீட்டர் பரப்பை புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் பகுதியின் கடற்பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தரப்படுகிறது. இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் கடல் பகுதி, நிலப்பகுதி ஆகியவை மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறிவிடும். கிழக்கு கடற்பகுதியில் மீன் இல்லாத கடல் பகுதியாக மாறும். மீன் வளம் அழியும் மீன்கள் இப்பகுதியை விட்டு வெளியேறும். மீனவர்களின் மீன்பிடித் தொழில் அழிந்துபோகும். ஏராளமான எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படுவதால் மீனவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் இப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்படாது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006 இல் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க இனி சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் இல்லை என்றும், மக்களிடம் இனி கருத்து கேட்பு நடத்தத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றைக் கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார். இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழர் தன்மானப் பேரவை, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.