ETV Bharat / state

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்த சர்ச்சை பேச்சு; விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! - RBVS Manian Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.பி.வி.எஸ்.மணியன் கோப்புப்படம்
ஆர்.பி.வி.எஸ்.மணியன் கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தியாகராய நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்டத் தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.

இதனடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல் துறையினர், அவரை கைது செய்தனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட மணியன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.

இதையும் படிங்க: ஜாமீனில் எடுத்த வழக்கறிஞருக்கு கத்தி குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் துயரம்.. சேலம் அருகே ரவுடி வெறிச்செயல்!

இந்த நிலையில், ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு எதிராக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்களை இணைத்து போலீசார் இந்த குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: சென்னை தியாகராய நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்டத் தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.

இதனடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல் துறையினர், அவரை கைது செய்தனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட மணியன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.

இதையும் படிங்க: ஜாமீனில் எடுத்த வழக்கறிஞருக்கு கத்தி குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் துயரம்.. சேலம் அருகே ரவுடி வெறிச்செயல்!

இந்த நிலையில், ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு எதிராக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்களை இணைத்து போலீசார் இந்த குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.