ETV Bharat / state

நாகையில் மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 2, 2020, 2:23 PM IST

நாகப்பட்டினம்: டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கொட்டும் மழையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Central government
Agriculture act

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதிலுமிருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் கொட்டும் மழையில் நனைந்தபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதிலுமிருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் கொட்டும் மழையில் நனைந்தபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.