ETV Bharat / state

கனமழையினால் பல ஏக்கர் நெற்கதிர்கள் நாசம்! - நாகை மழை நெற்கதிர் நாசம்

நாகை: வேளாங்கண்ணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையினால் பல ஏக்கர் நெற்கதிர்கள் நாசமடைந்துள்ளன.

nagai-near-velankanni-heavy-rain-damaged-paddy-crops
நெற்கதிர்கள்
author img

By

Published : Jan 7, 2020, 5:27 PM IST

தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளுக்கு சம்பா சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.

மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக் குறையின் காரணமாக காலதாமதம் ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது நாகை மாவட்டத்திற்கு கால தாமதமாகவே வந்த நிலையில் வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட மானாவரி பகுதி நிலபரப்புகளில் மழையை நம்பி சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. இதில் சாகுபடி செய்திருந்த பல ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து விழுந்ததால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு நிவாரணம் வழங்கக்கோரியும் மேலும் கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கியக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேளாங்கண்ணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நெற்கதிர்

இதையும் படிங்க: மணிமுக்தா அணை நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளுக்கு சம்பா சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.

மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக் குறையின் காரணமாக காலதாமதம் ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது நாகை மாவட்டத்திற்கு கால தாமதமாகவே வந்த நிலையில் வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட மானாவரி பகுதி நிலபரப்புகளில் மழையை நம்பி சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. இதில் சாகுபடி செய்திருந்த பல ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து விழுந்ததால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு நிவாரணம் வழங்கக்கோரியும் மேலும் கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கியக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேளாங்கண்ணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நெற்கதிர்

இதையும் படிங்க: மணிமுக்தா அணை நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

Intro:வேளாங்கண்ணி சுற்றுப்பகுதியில் காலையில் பெய்த மழையினால் பல ஏக்கர் நெற்கதிர்கள் நாசம்.Body:வேளாங்கண்ணி சுற்றுப்பகுதியில் காலையில் பெய்த மழையினால் பல ஏக்கர் நெற்கதிர்கள் நாசம்.


தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சம்பா சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம் .மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக் குறையின் காரணமாக காலதாமதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது .அது நாகை மாவட்டத்திற்கு கால தாமதமாகவே வந்து நிலையில். மேட்டூர் அணையின் நீர்வரத்து நம்பி அந்த பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். இந்த சூழலில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, தெற்குப் பொய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட மானாவரி பகுதி நிலபரப்பில் மழையை நம்பி சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு காற்றுடன்கூடிய கன மழைபெய்தது இதில் சாகுபடி செய்திருந்த பல ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயிகள் இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூட்டுற சங்க மூலம் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.