நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அரசு பேருந்து பணிமனையில் ஊழியர்களுக்கான ரூ. 39 லட்சம் மதிப்பிலான புதிய ஓய்வறை கட்டடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் போன்ற எல்லையோர மாநிலங்கள் வழியாக வெளிநாட்டவர்கள் ஊடுருவாமல் இருப்பதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு கிடையாது. எதிர்க்கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக தவறான கருத்துகளை கூறி பொதுமக்களை திசை திருப்புகிறார்கள்.
அரசியல் செய்ய வழியில்லாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுத்து தவறான கருத்துகளை கூறி வரும் ஸ்டாலின், குறுகிய மனப்பான்மையுடன் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகின்றார்” என்றார்.
மேலும், நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனை குறித்து கேட்டதற்கு, வருமானவரித் துறை சோதனை அனைத்து துறைகளிலும் நடைபெறும் நிகழ்வு. அதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்பபட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் முற்றுகை போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை!