ETV Bharat / state

புது மாவட்டமாக பிறக்குமா மயிலாடுதுறை? - நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

mayiladuthurai-new-distric
author img

By

Published : Nov 6, 2019, 11:36 PM IST

125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே சந்திப்பு கொண்டிருக்கும் ஊர். கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர். புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் எனும் பெருமை பெற்றது ’மயிலாடுதுறை’.

இத்தகைய சிறப்புமிக்க மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று, கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம் தொடங்கி மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கை மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1991ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்திலும் மயிலாடுதுறைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவரின் கருத்து

4 வட்டங்கள், 3 சட்டமன்றத் தொகுதிகள், 5 ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். மயிலாடுதுறையுடன் ஒப்பிடும்போது, தனியாகப் பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மக்கள் தொகையும் 3 வட்டங்களும் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் இந்த வருடம் தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல புதிய மாவட்ட அறிவிப்புகள் தமிழ்நாடு சட்டசபையில் வெளியிடப்பட்டன. அதே போன்று கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை கோட்டத்தில் இருக்கும் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புது மாவட்டமாக பிறக்குமா மயிலாடுதுறை?

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மயிலாடுதுறை மாவட்டத் தலைநகராக அறிவிக்கப்படுமா என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க:

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே நாகையில் புயல் எச்சரிக்கை

125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே சந்திப்பு கொண்டிருக்கும் ஊர். கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர். புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் எனும் பெருமை பெற்றது ’மயிலாடுதுறை’.

இத்தகைய சிறப்புமிக்க மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று, கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம் தொடங்கி மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கை மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1991ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்திலும் மயிலாடுதுறைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவரின் கருத்து

4 வட்டங்கள், 3 சட்டமன்றத் தொகுதிகள், 5 ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். மயிலாடுதுறையுடன் ஒப்பிடும்போது, தனியாகப் பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மக்கள் தொகையும் 3 வட்டங்களும் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் இந்த வருடம் தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல புதிய மாவட்ட அறிவிப்புகள் தமிழ்நாடு சட்டசபையில் வெளியிடப்பட்டன. அதே போன்று கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை கோட்டத்தில் இருக்கும் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புது மாவட்டமாக பிறக்குமா மயிலாடுதுறை?

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மயிலாடுதுறை மாவட்டத் தலைநகராக அறிவிக்கப்படுமா என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க:

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே நாகையில் புயல் எச்சரிக்கை

Intro:மயிலாடுதுறை தலைமையிடமாக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரிக்கை:-
Body:மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம் தொடங்கி மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கை மக்களிடையே தொடர்ந்து வருகிறது.
ஆனால், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1991-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்திலும் மயிலாடுதுறைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மயிலாடுதுறை கோட்டத்திலிருந்து மாவட்ட தலைநகரான நாகைக்கு செல்ல புதுச்சேரி மாநிலம் காரைக்காலை கடந்தும் அல்லது திருவாரூர் மாவட்டத்தை கடந்தும் செல்ல வேண்டும். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
4 தாலுகாக்கள், 3 சட்டமன்ற தொகுதிகள், 5 ஓன்றியங்கள், 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையில் சுமார் 10லட்சம் பேர் வசிக்கின்றனர். மயிலாடுதுறையுடன் ஒப்பிடும்போது, தனியாக பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் தொகை 3 தாலுகாக்கள் மட்டுமே உள்ளது.
125 ஆண்டு பழமைவாய்ந்த ரெயிவே ஜங்ஷன் உள்ள ஊர் மயிலாடுதுறை. தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை வாழ்ந்து மறைந்த ஊர் மயிலாடுதுறை. புகழ்பெற்ற பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்களை கொண்டது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்து வாழ்ந்த பகுதி. நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் பிறந்து வாழ்ந்த பகுதி. சைவ, வைணவ தலங்கள் மட்டுமின்றி புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்களை கொண்டது. பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி போன்ற வரலாற்று சுற்றுலா பகுதிகளைக் கொண்டது மயிலாடுதுறை.
காவிரிப்படுகையைக் கொண்ட இந்த மயிலாடுதுறை கோட்டம் 150 ஆண்டுகால நகராட்சி வரலாறு கொண்டது. பல்வேறு அடிப்படை காரணங்களுக்காக மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கு 2004-ஆம் ஆண்டு தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்தது.
இந்நிலையில் சுனாமி பேரழிவு ஏற்பட்டது. இதனால் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக உருவாக்கும் பணியை அரசு தள்ளிவைத்தது. பின்னர் 2011ம் ஆண்டு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாகத்துறை கமிஷனருக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நாகை கலெக்டருக்கு வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர் கடிதம் அனுப்பினார். தமிழக அரசும் நிர்வாக பிரிவுகள் தொகுதி பிரிவுகள் பற்றிய விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்ட புதிய மாவட்டத்தை அமைப்பதற்காக, கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி அரசுக்கு நாகை கலெக்டர் அனுப்பி வைத்தார். அதற்கு பிறகும் மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிப்பதற்கு தலைமை செயலாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து நீதிமன்றம் தலையிட்டு மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் மூத்த வழிக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவை பரிசீலித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். தனிமாவட்டமாக ஆக்க உத்தரவிட முடியாது. மனுதாரர் கொடுத்துள்ள மனுவை தலைமைச் செயலாளர் சட்டவிதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்தக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டாலும் மயிலாடுதுறையில் உள்ள அனைத்துக் கட்சியினர்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வர்த்தக சங்கத்தினர் போன்ற ஒட்டுமொத்த மக்களும் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கக்கோரி வருகின்றனர். மாவட்டத் தலைநகராவதற்கான வரலாற்றுத் தகுதியை நிரம்பவே பெற்றிருக்கிறது மயிலாடுதுறை. வரலாற்றுச்சிறப்பு என்பது ஏதோ இன்று, நேற்றல்ல. சோழர்கள் நாயக்கர்களைத் தொடர்ந்து தஞ்சையை ஆண்ட மராட்டியர்களிடம் இருந்த அப்போதைய மாயூரம் சுற்றுவட்டார பகுதிகள், 1799 அக்டோபர் 25 ஆம் தேதி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திற்கு மாறியது. டச்சுக்காரர்களிடம் இருந்த தரங்கம்பாடியை 1845ல் ஆங்கிலேயர்கள் விலை கொடுத்து வாங்கினர். கடலோர நகரமாக, அவர்களின் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக இருந்ததால், தரங்கம்பாடியிலேயே சில காலம் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது. பின்னர் ஜில்லா தலைநகரமாக தஞ்சாவூர் மாறியது.
முதலில் தரங்கம்பாடியும் பின்னர் தஞ்சாவூரும் மாவட்டத்தலைநகரங்களாக இருந்த காலகட்டத்திலேயே முன்சீப் கோர்ட் சப் கோர்ட் சப் கலெக்டர் அலுவலகம் என்று மாவட்டத் தலைநகருக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை திகழ்ந்தது. அதாவது மயிலாடுதுறை நீதிமன்றமும் சப்-கலெக்டர் அலுவலகமும் 100 ஆண்டுகளைத் தாண்டிய வரலாறு கொண்டவை. சப்கலெக்டர் அலுவலகம் 1907ம் ஆண்டு கட்டப்பட்டது இதற்கு சாட்சியாகும். அதனால்தான் ஆந்திராவையும் சேர்த்து அகண்ட மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 29 ஊர்களை மட்டுமே ஆங்கிலேயர் முதன்முதலில் நகரம் என்று அடையாளம் கண்டு அந்த ஊர்களை நகராட்சிகளாக உருவாக்கினார்கள். அப்படி பழைய தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் ஒன்று மாயூரம். (மயிலாடுதுறையோடு உருவாக்கப்பட்ட சேலம் போன்ற நகராட்சிகள் மாநகராட்சிகளாகி மாவட்டத் தலைநகரங்களாகவும் ஆகிவிட்டன).

இந்நிலையில் இந்த வருடம் தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பல புதிய மாவட்ட அறிவிப்புகள் தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்டன. அதே போன்று கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவித்தார். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை கோட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் அறிவிப்பு குறித்து, மயிலாடுதுறையில் சேம்பர் ஆப் காமர்ஸ், வர்த்தக சங்கத்தினர், விவசாய சங்கங்கள், மருத்துவர் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைநகராக அறிவிக்கப்படுமா என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

பேட்டி:-
01, ராம.சேயோன் (வழக்கறிஞர்;)
02, மோகன்குமார் (சமூக ஆர்வலர்)
03, ராமலிங்கம் (இயற்கை விவசாயி)
04, கண்ணன் (வர்த்தகர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.