ETV Bharat / state

பள்ளித் தேர்வுகளில் சாதி ரீதியான கேள்விகள் இடம்பெறவில்லை- எச்.ராஜா - பள்ளித் தேர்வுகளில் சாதி ரீதியான கேள்விகள் இடம்பெறவில்லை- எச்.ராஜா

நாகை: பள்ளித் தேர்வுகளில் சாதி ரீதியான கேள்விகள் இடம் பெற்றுள்ளது என்ற ஸ்டாலினின் பதிவு அடிப்படை ஆதாரமற்றது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

h.raja spokes about stalin
author img

By

Published : Sep 11, 2019, 12:55 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, கேந்திர வித்யாலயா பள்ளிகளின் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் ஜாதி மதரீதியான கேள்விகள் இடம் பெற்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த பதிவிற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அப்படி எந்த கேள்வியும் இடம் பெறவில்லை. இதிலிருந்து திமுக, சமூக வலைதளங்களில் பொய்களை மட்டுமே பரப்புவதை வேலையாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.

மேலும் பேசிய அவர், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடன் நிறுத்தப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவிவருவது அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளித் தேர்வுகளில் சாதி ரீதியான கேள்விகள் இடம் பெறவில்லை- எச்.ராஜா

இதுபோன்ற பொய்களை பரப்புவர்கள் சமூகவிரோதிகள் என்று கருதி அவர்களை ஒதுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதிய திட்டத்தைப் போலவே, முறைசார தொழிலளர்கள்,விவசாயிகளுக்காக மாதம் மூன்றாயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அரசு அறிவிக்கவுள்ளது என்றார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, கேந்திர வித்யாலயா பள்ளிகளின் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் ஜாதி மதரீதியான கேள்விகள் இடம் பெற்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த பதிவிற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அப்படி எந்த கேள்வியும் இடம் பெறவில்லை. இதிலிருந்து திமுக, சமூக வலைதளங்களில் பொய்களை மட்டுமே பரப்புவதை வேலையாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.

மேலும் பேசிய அவர், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடன் நிறுத்தப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவிவருவது அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளித் தேர்வுகளில் சாதி ரீதியான கேள்விகள் இடம் பெறவில்லை- எச்.ராஜா

இதுபோன்ற பொய்களை பரப்புவர்கள் சமூகவிரோதிகள் என்று கருதி அவர்களை ஒதுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதிய திட்டத்தைப் போலவே, முறைசார தொழிலளர்கள்,விவசாயிகளுக்காக மாதம் மூன்றாயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அரசு அறிவிக்கவுள்ளது என்றார்.

Intro:மயிலாடுதுறையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி: வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைகடன் நிறுத்தப்படுவதாக பொய்யான தகவல்களை பரப்புவது அதிர்ச்சி அளிக்கிறது.
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. ஜாதி ரீதியாக கேந்திர வித்யாலயா ஆறாம் வகுப்பு வினாத்தாளில் கேள்விகேட்டு இருப்பதாக செய்தியை ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். 49 கேந்திர வித்யாலயா உள்ள பள்ளயில் அப்படி எந்த கேள்வியும் இடம் பெறவில்லை. திமுக பொய்களை செய்தி சமூக வலைதளங்களில் பரப்புவதை வேலையாக வைத்துள்ளது. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைகடன் நிறுத்தப்படுவதாக பொய்யான தகவல்களை பரப்புவது அதிர்ச்சி அளிக்கிறது. இது கலப்படமில்லாத பொய். இம்மாதிரிகளான பொய்களை பரப்புவர்கள் சமூகவிரோதிகள் என்று கருதி அவர்களை ஒதுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரிகளுக்கு இருந்த பென்சன் திட்ட போல முறைசார தொழிலளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மாதம் 3ஆயிரம் பென்சன் திட்டத்தை நாளை பிரதமர் மோடி அரசு அறிவிக்கிறார். விவசாயிகளுக்கு நன்மைகளை மட்டும் செய்யும் அரசாக மத்திய அரசு விளங்குகிறது. விவசாயித்திற்கு எதிரான எந்த ஒரு முடிவையும் மோடி அரசு எடுக்காது. பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை, ஆண்டு இறுதியில் நாட்டின் வளர்ச்சி 6.2 சதவீதம் வளர்ச்சி இருக்கும். நேரு காலத்திலிருந்து 70ஆண்டுகளாக பொருளாதாரத்தில் ஒழுக்கம் இல்லை, பண மதிப்பிழப்பு பிறகு வங்கிகளுக்கு பணம் வந்துள்ளது. இதை சிறுகுறு தொழில்களுக்கும் விவசாயத்திற்கும் கொடுக்கும் பொது தற்போது உள்ள தேக்க நிலை மாறி நாடு வளர்ச்சியடையும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.