ETV Bharat / state

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்!

author img

By

Published : Jan 12, 2021, 11:00 PM IST

நாகை : வேளாங்கண்ணியில் பழுதடைந்த சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்!
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்!

உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணியில் பிரதான சாலைகள் பழுதடைந்து படு மோசமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்துவருகின்றனர்.

குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவரும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்!

அவ்வறிவிப்பின் அடிப்படையில், இன்று (ஜன.12) வேளாங்கண்ணியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலை சீரமைப்பு பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், அலட்சியம் காட்டும் வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தடுத்துவைத்தனர்.

திமுகவினரின் சாலை மறியல் போராட்டம் காரணமாக வேளாங்கண்ணியில் இரண்டு நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க : பரமத்தியில் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணியில் பிரதான சாலைகள் பழுதடைந்து படு மோசமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்துவருகின்றனர்.

குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவரும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்!

அவ்வறிவிப்பின் அடிப்படையில், இன்று (ஜன.12) வேளாங்கண்ணியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலை சீரமைப்பு பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், அலட்சியம் காட்டும் வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தடுத்துவைத்தனர்.

திமுகவினரின் சாலை மறியல் போராட்டம் காரணமாக வேளாங்கண்ணியில் இரண்டு நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க : பரமத்தியில் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.