ETV Bharat / state

மழை நீர் சேகரிப்பால் தண்ணீர் பிரச்னை தீரும் - சஞ்சீவ் பட்ஜோஷி

author img

By

Published : Jul 18, 2019, 11:08 PM IST

நாகை: மழை நீர் சேகரிப்பின் மூலம் தண்ணீர் பிரச்னை தீரும் என்று நம்புவதாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளர் டாக்டர். சஞ்சீவ் பட்ஜோஷி தெரிவித்துள்ளார்.

joshi

நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் ’ஜல்சக்தி அபியான்’ திட்டம் மூலம் மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், குளங்களை மேம்படுத்துதல், நீர் நிலைகளை சீரமைத்தல், நிலத்தடி நீரை தேக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டங்கள் குறித்து, செம்பனார்கோயில், முடிகொண்டநல்லூர், பரசலூர், திருச்சம்பள்ளி, கிடாரங்கொண்டான், காளஹஸ்தினாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கண்காணிப்பு அலுவலரும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளருமான டாக்டர் சஞ்சீவ் பட்ஜோஷி கூறுகையில், ”மழை நீரை சேகரிக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வயல்களில் குட்டைகள் அமைத்தும், குளங்களை சீரமைத்தும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியும், பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பஞ்சாபில், ஆழ்துளைக் கிணறுகள் மூலம், மழை நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் நாகை மாவட்டத்தில் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் பணிகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நாகை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை தீரும் என்று நம்புகிறேன்.

மாவட்டத்தில் அதிகளவில் ஆறுகள் உள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், கடல்நீர் உட்புகுந்து, உப்புத்தன்மை அதிகரித்து வருகிறது. இது குறித்து, வல்லுநர் குழு உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் ’ஜல்சக்தி அபியான்’ திட்டம் மூலம் மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், குளங்களை மேம்படுத்துதல், நீர் நிலைகளை சீரமைத்தல், நிலத்தடி நீரை தேக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டங்கள் குறித்து, செம்பனார்கோயில், முடிகொண்டநல்லூர், பரசலூர், திருச்சம்பள்ளி, கிடாரங்கொண்டான், காளஹஸ்தினாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கண்காணிப்பு அலுவலரும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளருமான டாக்டர் சஞ்சீவ் பட்ஜோஷி கூறுகையில், ”மழை நீரை சேகரிக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வயல்களில் குட்டைகள் அமைத்தும், குளங்களை சீரமைத்தும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியும், பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பஞ்சாபில், ஆழ்துளைக் கிணறுகள் மூலம், மழை நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் நாகை மாவட்டத்தில் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் பணிகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நாகை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை தீரும் என்று நம்புகிறேன்.

மாவட்டத்தில் அதிகளவில் ஆறுகள் உள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், கடல்நீர் உட்புகுந்து, உப்புத்தன்மை அதிகரித்து வருகிறது. இது குறித்து, வல்லுநர் குழு உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Intro:மழை நீர் சேகரிப்பின் மூலம் நாகை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நம்புவதாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளர் டாக்டர்.சஞ்சீவ் பட்ஜோஷி ஆய்விற்குப்பின் பேட்டி:-Body:நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம், மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், குளங்களை மேம்படுத்துதல், நீர் நிலைகளை சீரமைத்து, நிலத்தடி நீரை தேக்கும் பல்வேறு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி துவங்கிய திட்டம், நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த திட்டங்கள் குறித்து, செம்பனார்கோயில், முடிகொண்டநல்லூர், பரசலூர், திருச்சம்பள்ளி, கிடாரங்கொண்டான், காளஹஸ்தினாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கண்காணிப்பு அலுவலரும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளருமான டாக்டர் சஞ்சீவ் பட்ஜோஷி, மழை நீரை சேகரிக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவம், வயல்களில் குட்டைகள் அமைத்தும், குளங்களை சீரமைத்தும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பஞ்சாபில், ஆழ்துளைக்கிணறுகள் மூலம், மழை நீர் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதுபோல் நாகை மாவட்டத்தில் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் நல்ல விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் பணிகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நாகை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நம்புவதாக தெரிவித்தார். நாகை மாவட்டத்தில், அதிக அளவில் ஆறுகள் உள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், கடல்நீர் உட்புகுந்து, உப்புத்தன்மை அதிகரித்து வருவதாகவும், இது குறித்து, வல்லுநர் குழு உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பேட்டி : மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளர் டாக்டர்.சஞ்சீவ் பட்ஜோஷிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.