ETV Bharat / state

'விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக உள்ளனர்' - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

author img

By

Published : Feb 10, 2020, 10:01 PM IST

நாகை: நடிகர் விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

Arjun sampath, actor vijay
Arjun sampath, actor vijay

நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மணிகண்டனுக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடடிக்கை எடுக்கக்கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மனு அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், 'ஒரு விவசாயி முதலமைச்சரானால் என்ன நடக்குமோ... அது தற்போது நடந்துவிட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. இதன்மூலம் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மட்டுமின்றி விளைநிலங்கள், வீட்டுமனைகள் ஆவதும் தடுக்கப்படும்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்டு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது திமுக தான். அது மட்டுமல்லாது காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைப்பதற்காக வாபஸ் பெற்றவர் கருணாநிதி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டார்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'நடிகர் ரஜினிகாந்த்தின் ஆன்மிக அரசியலுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அவர் நிச்சயமாக முதலமைச்சராக ஆவார். மேலும், நடிகர் ஜோசப் விஜய் விவகாரத்தில் வருமான வரித்தறை தனது கடமையை சட்டப்படி செய்துகொண்டிருக்கிறது. விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள். விஜய்யின் வருமானம் மற்றும் திரைப்பட கவர்ச்சியை வைத்து திரைப்படத்துறையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஊடுருவி மதத்தைப் பரப்பிவருகின்றனர்' என்றும் குற்றம்சாட்டினார்.

புகார் மனுவை வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத்

மேலும், லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு செய்கிறது. அக்கல்லூரி கோயில் இடத்தில் இயங்கி வருகிறது. அதனை அரசு கையகப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினார்.

'இறுதியாக தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கோபுரத்திற்கு அழைத்துச் சென்று மரியாதை செய்த அலுவலர், அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:

'உறுப்புகள் தானம் மூலம் 4 பேர்களின் உயிரில் எங்கள் மகனும் வாழ்கிறான்' - சேலம் பெற்றோர் உருக்கம்

நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மணிகண்டனுக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடடிக்கை எடுக்கக்கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மனு அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், 'ஒரு விவசாயி முதலமைச்சரானால் என்ன நடக்குமோ... அது தற்போது நடந்துவிட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. இதன்மூலம் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மட்டுமின்றி விளைநிலங்கள், வீட்டுமனைகள் ஆவதும் தடுக்கப்படும்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்டு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது திமுக தான். அது மட்டுமல்லாது காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைப்பதற்காக வாபஸ் பெற்றவர் கருணாநிதி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டார்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'நடிகர் ரஜினிகாந்த்தின் ஆன்மிக அரசியலுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அவர் நிச்சயமாக முதலமைச்சராக ஆவார். மேலும், நடிகர் ஜோசப் விஜய் விவகாரத்தில் வருமான வரித்தறை தனது கடமையை சட்டப்படி செய்துகொண்டிருக்கிறது. விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள். விஜய்யின் வருமானம் மற்றும் திரைப்பட கவர்ச்சியை வைத்து திரைப்படத்துறையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஊடுருவி மதத்தைப் பரப்பிவருகின்றனர்' என்றும் குற்றம்சாட்டினார்.

புகார் மனுவை வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத்

மேலும், லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு செய்கிறது. அக்கல்லூரி கோயில் இடத்தில் இயங்கி வருகிறது. அதனை அரசு கையகப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினார்.

'இறுதியாக தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கோபுரத்திற்கு அழைத்துச் சென்று மரியாதை செய்த அலுவலர், அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:

'உறுப்புகள் தானம் மூலம் 4 பேர்களின் உயிரில் எங்கள் மகனும் வாழ்கிறான்' - சேலம் பெற்றோர் உருக்கம்

Intro:நடிகர் ஜோசப்விஜய்; விவகாரத்தில் வருமான வரித்தறை தனது கடமையை சட்டபடி செய்துகொண்டிருக்கிறது. அவரது உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள். விஜயின் வருமானம் மற்றும் திரைப்பட கவர்ச்சியை வைத்து மதத்தை பரப்புகிறார்கள் அர்ஜூன் சம்பத் மயிலாடுதுறையில் பேட்டி:Body:நடிகர் ஜோசப்விஜய்; விவகாரத்தில் வருமான வரித்தறை தனது கடமையை சட்டபடி செய்துகொண்டிருக்கிறது. அவரது உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள். விஜயின் வருமானம் மற்றும் திரைப்பட கவர்ச்சியை வைத்து மதத்தை பரப்புகிறார்கள் அர்ஜூன் சம்பத் மயிலாடுதுறையில் பேட்டி:-

நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மணிகண்டனுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில்; இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத்,

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு விவசாயி முதலமைச்சரானால் என்ன நடக்குமோ அது இப்போது நடந்துவிட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்திருப்பதால் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மட்டுமின்று விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆவதும் தடுக்கப்படும். தமிழக முதல்வர் பழனிச்சாமி அவருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். காவிரி நதிநீர் பிரச்னையிலும், மீத்தேன் திட்டத்திலும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது திமுக என்பதை அனைவரும் நினைவில்வைத்துகொள்ள வேண்டும். காவிரிநதிநீர் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கை இந்திராகாந்தியுடன் கூட்டணி அமைப்பதற்கு வாபஸ் பெற்றவர் கருணாநிதி. மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்துபோட்டு தொடங்கிவைத்தது திமுக தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டார். தற்போது முதல்வர் பழனிச்சாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பது அதிமுக அரசு. நடிகர் ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியுள்ளார். வரும் ஜனவரி 2021ல் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் களத்தில் இருக்கபோவதாக கூறியுள்ளார். ரஜினிக்கு அமோகமான ஆதரவு இருக்கிறது நிச்சயமாக முதலமைச்சராக ரஜினிஆவார். வருமானவரித்துறை சட்டப்படி தனது கடமையை செய்து வருகிறது. நடிகர் ஜோசப்விஜய்; விவகாரத்தில் வருமான வரித்தறை தனது கடமையை சட்டபடி செய்துகொண்டிருக்கிறது. அவரது உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள். விஜயின் வருமானம் மற்றும் திரைப்பட கவர்ச்சியை வைத்து திரைப்படத்துறையில் கிறிஸ்தவ அமைப்பினர் உடுருவி மதத்தை பரப்பி வருகின்றனர். லயோலாகல்லூரி கருத்துகணிப்பு கிடையாது கருத்துதினிப்பு. லயோலாகல்லூரி கோயில் இடத்தில் இயங்கி வருகிறது. அதனை அரசு கையப்படுத்த வேண்டும். சீமான் அவருடன் வந்தவரை தஞ்சை பெரியகோயில் கோபுரத்திற்கு அழைத்து சென்று மரியாதை செய்துவைத்த அதிகாரி மற்றும் அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்கு வரவேண்டியதில்லை. சிவனை பற்றி தரகுறைவாக பேசிய சீமான் தாய்மதத்திற்கு திரும்பிவிட்டாரா, எந்த மடாதிபதி தாய்மதம் திரும்பியதற்கான பூஜைகள் செய்துவைத்தார். அவரை எப்படி கோயிலுக்கு அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை. கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



பேட்டி : அர்ஜூன்சம்பத், மாநில தலைவர், இந்து மக்கள் கட்சிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.