ETV Bharat / state

அமமுகவின் வாக்கு இயந்திர முறைகேடு புகார்: தேர்தல் அலுவலர்கள் நிராகரிப்பு

author img

By

Published : May 23, 2019, 5:46 PM IST

நாகை: வாக்கு இயந்திரங்களில் முறைகேடு இருப்பதாக அமமுகவினர் அளித்த புகாரை தேர்தல் அலுவலர்கள் நிராகரித்தனர்.

File pic

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

இதனையடுத்து விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குலுக்கல் முறையில் 5 வாக்குப் பெட்டிகள், ஒப்புகை சீட்டை சரிபார்க்க முடியும் என்று தெரிவித்து புகாரை பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.

இது குறித்து அமமுக வேட்பாளர் செந்தமிழன் கண்டிப்பாக இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

இதனையடுத்து விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குலுக்கல் முறையில் 5 வாக்குப் பெட்டிகள், ஒப்புகை சீட்டை சரிபார்க்க முடியும் என்று தெரிவித்து புகாரை பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.

இது குறித்து அமமுக வேட்பாளர் செந்தமிழன் கண்டிப்பாக இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தார்.

Intro:வாக்கு இயந்திரங்களில் முறைகேடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் புகார் நிராகரிப்பு, வேட்பாளர் செந்தமிழன் பேட்டி:-


Body:மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை .விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குலுக்கல் முறையில் 5 வாக்குப் பெட்டிகள் மற்றும் ஒப்புகை சீட்டை சரிபார்க்க முடியும் என்று தெரிவித்து புகாரை பெறுவதற்கு மறுத்துவிட்டனர். வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் கழக நீதிமன்றத்தில் எடுத்துச் சென்று வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தார்.
பேட்டி : செந்தமிழன் (அமமுக வேட்பாளர்).


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.