ETV Bharat / state

மருத்துவ செலவுக்கு கூட பணம் தராத பிள்ளைகள்… பிள்ளைகள் மீது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:45 PM IST

parents and senior citizens act: சொத்துகளை மட்டும் பெற்றுக் கொண்டு மருத்து செலவிற்கு கூட பணம் தராத பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Aggrieved father petitions for action against his sons for failure to take care parents
வயதான பெற்றோரை கண்டுகொள்ளாத பிள்ளைகள்
வயதான பெற்றோரை கண்டுகொள்ளாத பிள்ளைகள்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவிந்தராஜ் நகரில் வசித்து வருபவர் முத்துவீரன் (82). இவருக்கு இரண்டு திருமணம் ஆகிய நிலையில் முதல் மனைவி இறந்ததால் இரண்டவது மனைவியுடன் வசித்து வருகிறார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2வது மனைவிக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள் என மொத்தம் 6 பிள்ளைகள் இருக்கின்றனர்.

அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் மனைவி இறந்ததால் முத்துவீரன் இரண்டாவது மனைவி ரமணியுடன் தனியே வசித்து வருகிறார். தனது மகன்கள் மற்றும் மகள்களுக்கு முத்துவீரன் சம்பாதித்து சேர்த்து வைத்த சொந்தமான நிலத்தை விற்று கிடைத்த ரூ.48 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணத்தை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.

4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்கு தலா ரூபாய் 6 லட்சமும் மேலும், மீதம் இருந்த பணத்தை பல தவணைகளில் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் சண்முகசுந்தரத்திடம் வழங்கியுள்ளார். மேலும் தன்னுடைய மகளான லதாவின் மகள் ராஜேஸ்வரியின் திருமணத்தின் போது 5 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வயதான பெற்றோர்களை பிள்ளைகளை கண்டு கொள்ளமல் இருந்துள்ளனர். தந்தையிடம் கூடுதலாக பணம் பெற்ற சண்முகசுந்தரம் மட்டும் மாதம் 2000 ரூபாய் பணம் கொடுத்து தந்தைக்கு உதவி செய்து வந்துள்ளார். அவ்வப்போது மருத்துவ சிகிச்சையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சண்முகசுந்தரமும் கடந்த ஆறு மாதமாக பெற்றவர்களை கண்டு கொள்ளமல் இருந்துள்ளார். வயதான நிலையில் உள்ள தன்னையும் தன் மனைவி ரமணியையும் கண்டுகொள்ளாத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் மற்றும் விதிகள் 2007ன் படி நடவடிக்கை எடுக்க சீர்காழி கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய கோட்டாட்சியர் அர்ச்சனா, மகன் சண்முகசுந்தரம் அவரின் பெற்றோர்களின் ஆயுட்காலம் வரை மாதம் ரூபாய் 5000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மனுதாரர் 1 மாதத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீடு செய்த முத்துவீரன் தன்னையும் தனது மனைவி ரமணியையும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பதாக கூறி தன்னிடமிருந்து பணத்தை பெற்றுகொண்டு ஏமாற்றிய தனது மகன்மீதும், மருமகன் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் குழந்தை திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை!

வயதான பெற்றோரை கண்டுகொள்ளாத பிள்ளைகள்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவிந்தராஜ் நகரில் வசித்து வருபவர் முத்துவீரன் (82). இவருக்கு இரண்டு திருமணம் ஆகிய நிலையில் முதல் மனைவி இறந்ததால் இரண்டவது மனைவியுடன் வசித்து வருகிறார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2வது மனைவிக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள் என மொத்தம் 6 பிள்ளைகள் இருக்கின்றனர்.

அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் மனைவி இறந்ததால் முத்துவீரன் இரண்டாவது மனைவி ரமணியுடன் தனியே வசித்து வருகிறார். தனது மகன்கள் மற்றும் மகள்களுக்கு முத்துவீரன் சம்பாதித்து சேர்த்து வைத்த சொந்தமான நிலத்தை விற்று கிடைத்த ரூ.48 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணத்தை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.

4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்கு தலா ரூபாய் 6 லட்சமும் மேலும், மீதம் இருந்த பணத்தை பல தவணைகளில் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் சண்முகசுந்தரத்திடம் வழங்கியுள்ளார். மேலும் தன்னுடைய மகளான லதாவின் மகள் ராஜேஸ்வரியின் திருமணத்தின் போது 5 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வயதான பெற்றோர்களை பிள்ளைகளை கண்டு கொள்ளமல் இருந்துள்ளனர். தந்தையிடம் கூடுதலாக பணம் பெற்ற சண்முகசுந்தரம் மட்டும் மாதம் 2000 ரூபாய் பணம் கொடுத்து தந்தைக்கு உதவி செய்து வந்துள்ளார். அவ்வப்போது மருத்துவ சிகிச்சையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சண்முகசுந்தரமும் கடந்த ஆறு மாதமாக பெற்றவர்களை கண்டு கொள்ளமல் இருந்துள்ளார். வயதான நிலையில் உள்ள தன்னையும் தன் மனைவி ரமணியையும் கண்டுகொள்ளாத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் மற்றும் விதிகள் 2007ன் படி நடவடிக்கை எடுக்க சீர்காழி கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய கோட்டாட்சியர் அர்ச்சனா, மகன் சண்முகசுந்தரம் அவரின் பெற்றோர்களின் ஆயுட்காலம் வரை மாதம் ரூபாய் 5000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மனுதாரர் 1 மாதத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீடு செய்த முத்துவீரன் தன்னையும் தனது மனைவி ரமணியையும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பதாக கூறி தன்னிடமிருந்து பணத்தை பெற்றுகொண்டு ஏமாற்றிய தனது மகன்மீதும், மருமகன் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் குழந்தை திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.