நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது வீட்டில் சட்டவிரோதமாக மஞ்சள் பதுக்கி வைத்திருப்பதாகக் கடலோர காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. முனீஸ்வரன் வீட்டில் சோதனை செய்தபோது 2000 ஆயிரம் கிலோ விரலி மஞ்சள் மூட்டை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மஞ்சள் மூட்டைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் முனீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த மஞ்சளை இலங்கையிலிருந்து வரும் கடத்தல்காரர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து தங்கக் கட்டிகளை ஏதேனும் வாங்கத் திட்டமிட்டு இருந்தனரா என்ற அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: ஆட்சியர் முன்னிலையில் இளைஞரை சுட்டுக்கொன்ற பாஜக பிரமுகர் கைது!