ETV Bharat / state

குடும்பப் பிரச்னையால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை: திருமங்கலத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

author img

By

Published : Oct 8, 2020, 4:17 PM IST

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பழையூரைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் தினேஷ்குமார் (25). இவர் ஐடிஐ முடித்துவிட்டு வேலை கிடைக்காததால் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில் தனது அக்காவின் சிகிச்சைக்காக அவர் குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். அங்கு தன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டில் யாரிடமும் கூறாமல் மீண்டும் மதுரை திரும்பியுள்ளார்.

இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை வந்த அவர் திருமங்கலத்தில் உள்ள தனது சித்தி விஜயலட்சுமியின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டிவி உடைந்ததால் மாணவன் தற்கொலை!

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பழையூரைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் தினேஷ்குமார் (25). இவர் ஐடிஐ முடித்துவிட்டு வேலை கிடைக்காததால் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில் தனது அக்காவின் சிகிச்சைக்காக அவர் குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். அங்கு தன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டில் யாரிடமும் கூறாமல் மீண்டும் மதுரை திரும்பியுள்ளார்.

இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை வந்த அவர் திருமங்கலத்தில் உள்ள தனது சித்தி விஜயலட்சுமியின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டிவி உடைந்ததால் மாணவன் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.