தேனி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் தற்போது சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நீர் இருகரைகளையும் தொட்டுக் கரைபுரண்டோடுகிறது. இதனால் மதிச்சியம் பகுதியையும், முனிச்சாலை பகுதியையும் இணைக்கும் ஓபுளா படித்துறை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் கல் பாலம் மூழ்கியுள்ளதால், இவ்விரு பாலங்களிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வைகை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் குளிக்கவும், வாகனங்களை கழுவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து!