ETV Bharat / state

தென்மாவட்ட வெள்ளம்.. மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரிக்கை!

TN Pastoralist Society : தென் மாவட்ட பேரிடரில் கால்நடைகளை இழந்து தவிக்கும் மேய்ச்சல் சமூக மக்களுக்கு உரிய நிவாரண நிதியை பெற்றுத் தருவதுடன், மேய்ச்சல் தொழிலைக் காப்பாற்றி மீண்டும் சிறப்பாக செயல்படுவதற்கான வழிவகைகளையும் செய்ய வேண்டும் என தமிழக மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ்காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 2:08 PM IST

Updated : Dec 21, 2023, 4:25 PM IST

TN Pastoralist Society
தமிழக மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ்காந்தி
தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு கோரிக்கை

மதுரை: தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக மேய்ச்சல் சார்ந்து இயங்கக்கூடிய சமூக மக்கள், தங்கள் கால்நடைகளை இழந்து கடும் வாழ்வாதார சிக்கலை சந்தித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ்காந்தி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

அவர் கூறியதாவது, "தென்மாவட்டங்களில் பெய்த பெருமழை மிகப்பெரிய இயற்கைப் பேரிடர். பல்வேறு தரப்பு மக்களும் தம்முடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மனிதர்களுக்கு அடுத்தபடியாக பெரும் எண்ணிக்கையில் கால்நடைகள் இறந்துள்ளன. அதிலும், குறிப்பாக கால்நடைகளை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழக்கூடிய கிடைக்காரர்கள் என்று சொல்லக்கூடிய மேய்ச்சல் சமூக மக்கள் மிகப்பெரிய அளவில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கிடை போட்டு வாழக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர். தொடர் மழை காரணமாக மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாமல், கால்நடைகள் அனைத்தும் பசியால் இறந்திருக்கின்றன. தமிழக அரசு மிக விரிவான முறையில் களஆய்வு செய்து, கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பினை நடத்தி, எண்ணிக்கை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஏனென்றால், தேசியப் பேரிடர் மேலாண்மையில் மிகக்குறைந்த அளவு கால்நடை இழப்பிற்கு மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான கால்நடைகளை இழந்த நபருக்கு இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. மேய்ச்சல் சமூகத்தின் நிலை, வாழ்வாதாரம் பற்றிய பார்வையோடு இழப்பீடுகளை, உதவிகளை வழங்க வேண்டும்.

மேய்ச்சல் சமூக மக்கள் இந்த பேரிடரில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். ஏறக்குறைய சொந்த நிலத்திலேயே அகதியாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தனது பத்திரிகையாளர் சந்திப்பில் மிகக் குறைவான எண்ணிக்கையில் கால்நடைகளின் இறப்புகள் குறித்து பகிர்ந்திருக்கிறார். போதிய தகவல்களைச் சேகரித்து, விரிவான கள ஆய்வுகள் மேற்கொண்டு, மக்களின் இழப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

அரசு வழங்கக்கூடிய நிவாரண உதவிகளில் கிடைக்காரர்களான கீதாரிகள் பற்றிய புரிந்துணர்வோடு அரசு அதிகாரிகள் அணுக வேண்டும். அவர்களின் ஒற்றை வாழ்வாதாரம் கால்நடைகள் மட்டுமே. விவசாயிகளைப் பொறுத்தவரை, தங்கள் நிலங்களில் இனி பயிர் செய்து கொள்ளலாம். ஆனால், கிடைக்காரர்களின் வாழ்வாதாரமான கால்நடைகள் இறந்துவிட்டால், அவர்கள் முற்றிலும் நிர்கதியானவர்களாக மாறிவிடுவார்கள் என்ற அடிப்படையிலிருந்து அவர்களை புரிந்து கொள்வது அவசியம்.

உலகம் முழுவதும் மேய்ச்சல் நில மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பார்வை எழுந்துள்ள சூழ்நிலையில், வருகின்ற 2026ஆம் ஆண்டை உலக மேய்ச்சல் சமூக மக்களின் ஆண்டாக ஐ.நாவும் அறிவித்துள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்த பூமியை பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் பங்களிக்கக்கூடிய கிடைத்தொழிலைப் பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை ஐ.நா மேற்கொண்டு வரக்கூடிய காலகட்டத்தில், தென் மாவட்டங்களில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர், அவர்களை மிகப்பெரும் வாழ்வாதார பின்னடைவிற்குள் தள்ளியுள்ளது. கிடைத்தொழிலும் அழியும் அபாயத்திற்குச் சென்றுள்ளது.

ஆகையால் தமிழக அரசும், கால்நடைத்துறை அமைச்சரும் கிடைக்காரர்கள் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, தேசியப் பேரிடர் மேலாண்மையிடம் கோரி, அவர்களுக்கான கூடுதல் நிதியைப் பெற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் சார்பாக, இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை மக்களிடம் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில், அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பதவியைக்கூட இழக்கத் தயார்".. பட்டியலின பெண் தலைவி என்பதால் அந்தனூர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு கோரிக்கை

மதுரை: தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக மேய்ச்சல் சார்ந்து இயங்கக்கூடிய சமூக மக்கள், தங்கள் கால்நடைகளை இழந்து கடும் வாழ்வாதார சிக்கலை சந்தித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ்காந்தி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

அவர் கூறியதாவது, "தென்மாவட்டங்களில் பெய்த பெருமழை மிகப்பெரிய இயற்கைப் பேரிடர். பல்வேறு தரப்பு மக்களும் தம்முடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மனிதர்களுக்கு அடுத்தபடியாக பெரும் எண்ணிக்கையில் கால்நடைகள் இறந்துள்ளன. அதிலும், குறிப்பாக கால்நடைகளை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழக்கூடிய கிடைக்காரர்கள் என்று சொல்லக்கூடிய மேய்ச்சல் சமூக மக்கள் மிகப்பெரிய அளவில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கிடை போட்டு வாழக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர். தொடர் மழை காரணமாக மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாமல், கால்நடைகள் அனைத்தும் பசியால் இறந்திருக்கின்றன. தமிழக அரசு மிக விரிவான முறையில் களஆய்வு செய்து, கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பினை நடத்தி, எண்ணிக்கை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஏனென்றால், தேசியப் பேரிடர் மேலாண்மையில் மிகக்குறைந்த அளவு கால்நடை இழப்பிற்கு மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான கால்நடைகளை இழந்த நபருக்கு இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. மேய்ச்சல் சமூகத்தின் நிலை, வாழ்வாதாரம் பற்றிய பார்வையோடு இழப்பீடுகளை, உதவிகளை வழங்க வேண்டும்.

மேய்ச்சல் சமூக மக்கள் இந்த பேரிடரில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். ஏறக்குறைய சொந்த நிலத்திலேயே அகதியாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தனது பத்திரிகையாளர் சந்திப்பில் மிகக் குறைவான எண்ணிக்கையில் கால்நடைகளின் இறப்புகள் குறித்து பகிர்ந்திருக்கிறார். போதிய தகவல்களைச் சேகரித்து, விரிவான கள ஆய்வுகள் மேற்கொண்டு, மக்களின் இழப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

அரசு வழங்கக்கூடிய நிவாரண உதவிகளில் கிடைக்காரர்களான கீதாரிகள் பற்றிய புரிந்துணர்வோடு அரசு அதிகாரிகள் அணுக வேண்டும். அவர்களின் ஒற்றை வாழ்வாதாரம் கால்நடைகள் மட்டுமே. விவசாயிகளைப் பொறுத்தவரை, தங்கள் நிலங்களில் இனி பயிர் செய்து கொள்ளலாம். ஆனால், கிடைக்காரர்களின் வாழ்வாதாரமான கால்நடைகள் இறந்துவிட்டால், அவர்கள் முற்றிலும் நிர்கதியானவர்களாக மாறிவிடுவார்கள் என்ற அடிப்படையிலிருந்து அவர்களை புரிந்து கொள்வது அவசியம்.

உலகம் முழுவதும் மேய்ச்சல் நில மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பார்வை எழுந்துள்ள சூழ்நிலையில், வருகின்ற 2026ஆம் ஆண்டை உலக மேய்ச்சல் சமூக மக்களின் ஆண்டாக ஐ.நாவும் அறிவித்துள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்த பூமியை பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் பங்களிக்கக்கூடிய கிடைத்தொழிலைப் பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை ஐ.நா மேற்கொண்டு வரக்கூடிய காலகட்டத்தில், தென் மாவட்டங்களில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர், அவர்களை மிகப்பெரும் வாழ்வாதார பின்னடைவிற்குள் தள்ளியுள்ளது. கிடைத்தொழிலும் அழியும் அபாயத்திற்குச் சென்றுள்ளது.

ஆகையால் தமிழக அரசும், கால்நடைத்துறை அமைச்சரும் கிடைக்காரர்கள் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, தேசியப் பேரிடர் மேலாண்மையிடம் கோரி, அவர்களுக்கான கூடுதல் நிதியைப் பெற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் சார்பாக, இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை மக்களிடம் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில், அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பதவியைக்கூட இழக்கத் தயார்".. பட்டியலின பெண் தலைவி என்பதால் அந்தனூர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Last Updated : Dec 21, 2023, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.