முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்கைதியாக இருக்கும் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒருமாத காலம் பரோல் விடுப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவர் இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்.
இதனையொட்டி, மதுரை திருப்பரங்குன்றம் கோயில் முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: முடிந்த இரண்டு மாத கால பரோல் - சிறை திரும்பிய பேரறிவாளன்