ETV Bharat / state

பூட்டிய கடைக்குள் உயிரிழந்த நபர் - சிக்கிய கடிதம்

author img

By

Published : Jan 21, 2020, 6:31 PM IST

மதுரை: திருநகர் அருகே பூட்டிய கடைக்குள்ளே உடம்பில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சண்முகசுந்தரம்
உயிரிழந்த சண்முகசுந்தரம்

மதுரை திருநகர் மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(55). இவர் அப்பகுதியில் ஹெர்பல் சோப்பு மற்றும் ஆயில் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார். இவருடைய மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு சூர்யா, நந்து என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சண்முகசுந்தரம் நேற்று காலை வழக்கம்போல் தனது கடைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், அவரைத் தேடி அவரது சகோதரர்கள் கடைக்குச் சென்றனர்.

கடையின் கதவு உள்புறமாக பூட்டியிருந்ததைக் கண்ட சகோதரர்கள், கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், சண்முகம்சுந்தரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநகர் காவல் துறையினர். அங்கு சோதனை செய்தபோது, கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில் ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, உடல்நிலை குறைபாடுதான் காரணம்’ என எழுதியிருந்தது.

சண்முகசுந்தரம் உயிரிழந்து கிடந்த கடை

பின்னர், அவரது உடலை உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சண்முகசுந்தரம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்துள்ளார்களா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: யுபிஎஸ்சியில் தோல்வி - மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

மதுரை திருநகர் மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(55). இவர் அப்பகுதியில் ஹெர்பல் சோப்பு மற்றும் ஆயில் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார். இவருடைய மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு சூர்யா, நந்து என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சண்முகசுந்தரம் நேற்று காலை வழக்கம்போல் தனது கடைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், அவரைத் தேடி அவரது சகோதரர்கள் கடைக்குச் சென்றனர்.

கடையின் கதவு உள்புறமாக பூட்டியிருந்ததைக் கண்ட சகோதரர்கள், கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், சண்முகம்சுந்தரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநகர் காவல் துறையினர். அங்கு சோதனை செய்தபோது, கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில் ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, உடல்நிலை குறைபாடுதான் காரணம்’ என எழுதியிருந்தது.

சண்முகசுந்தரம் உயிரிழந்து கிடந்த கடை

பின்னர், அவரது உடலை உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சண்முகசுந்தரம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்துள்ளார்களா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: யுபிஎஸ்சியில் தோல்வி - மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

Intro:*திருநகர் அருகே கடையின் உள்ளே உடம்பில் காயங்களுடன் இறந்து கிடந்த நபர் - கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை*Body:*திருநகர் அருகே கடையின் உள்ளே உடம்பில் காயங்களுடன் இறந்து கிடந்த நபர் - கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை*

மதுரை திருநகர் மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 55 என்பவர் அப்பகுதியில் ஹெர்பல் சோப்பு மற்றும் ஆயில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருக்கு மனைவி ஜான்சிராணி, இரண்டு மகள்கள் சூர்யா மற்றும் நந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வராத சண்முகசுந்தரத்தை அவரது சகோதரர்கள் தேடி கடைக்கு சென்று உள்ளனர்.

இந்நிலையில் சோப்பு நிறுவனத்தின் கதவு உள்புறமாக பூட்டி இருந்ததை கண்டவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சண்முகம்சுந்தரத்தின் உடலில் பல இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

உடனடியாக காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருநகர் போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டபோது, எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், உடல்நிலை குறைபாடுதான் காரணம் என ஒரு கடிதம் இருந்தது. அதனை கைப்பற்றி திருநகர் போலீசார் சண்முகசுந்தரம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தனது மூத்த மகளுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சண்முகசுந்தரம் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.