ETV Bharat / state

விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்!

author img

By

Published : Jul 16, 2020, 12:33 PM IST

மதுரை: திருமங்கலத்தில் விவசாயிகளுக்கான விரோத சட்டங்களை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

sign
sign

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண்மை துறை சார்ந்த அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம் திருமங்கலம் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது, வருகின்ற ஜூலை 27ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்.

மேலும் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பார்வர்ட் பிளாக் விவசாயிகள் அணி உள்ளிட்ட பலரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: வெளியானது ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் - 92.2 விழுக்காடு தேர்ச்சி

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண்மை துறை சார்ந்த அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம் திருமங்கலம் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது, வருகின்ற ஜூலை 27ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்.

மேலும் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பார்வர்ட் பிளாக் விவசாயிகள் அணி உள்ளிட்ட பலரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: வெளியானது ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் - 92.2 விழுக்காடு தேர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.