ETV Bharat / state

'பதவி வெறியில் இருக்கிறார் ஸ்டாலின்' - செல்லூர் ராஜு

author img

By

Published : Oct 11, 2019, 11:27 PM IST

மதுரை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தோடும், பதவி வெறியோடும் இருக்கிறார் என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

sellur raju

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக வேட்பாளர் மீது ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து பேசியஅவர், அதிமுக வேட்பாளர் மீது திமுக காலத்தில் போடப்பட்ட வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வந்துள்ளது.

குற்ற வழக்கு வேட்பாளர் மீது இருந்தால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும். மு.க.ஸ்டாலின் பதவி வெறியில் இருக்கிறார். எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்று எண்ணத்தோடு இருக்கிறார். தேர்தலுக்காக எதாவது பொய்யான விஷயங்களை மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார்.

செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

2015 , 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது, எத்தனை முதலீடுகள் வந்துள்ளன, எத்தனை தொழில்துறை ஆரம்பித்துள்ளார்கள் என்பது பற்றியெல்லாம் ஸ்டாலினுக்கு விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, அதுபோலதான் ஸ்டாலினும்.

மேலும் நாங்குநேரி தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். அதனால் அந்தத் தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதிமுக அந்த தொகுதியில் உள்ளூர் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

எனவே அந்தத் தொகுதி மக்கள் அதிமுக வேட்பாளரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து மாபெரும் வெற்றியடையச்செய்வார்கள். அதிமுக வெற்றியென்பது உறுதி செய்யப்பட்ட வெற்றி " என்றார்

இதையும் படிங்க: 'ஆட்சி மாறும் மறுநாளே முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி'

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக வேட்பாளர் மீது ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து பேசியஅவர், அதிமுக வேட்பாளர் மீது திமுக காலத்தில் போடப்பட்ட வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வந்துள்ளது.

குற்ற வழக்கு வேட்பாளர் மீது இருந்தால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும். மு.க.ஸ்டாலின் பதவி வெறியில் இருக்கிறார். எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்று எண்ணத்தோடு இருக்கிறார். தேர்தலுக்காக எதாவது பொய்யான விஷயங்களை மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார்.

செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

2015 , 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது, எத்தனை முதலீடுகள் வந்துள்ளன, எத்தனை தொழில்துறை ஆரம்பித்துள்ளார்கள் என்பது பற்றியெல்லாம் ஸ்டாலினுக்கு விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, அதுபோலதான் ஸ்டாலினும்.

மேலும் நாங்குநேரி தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். அதனால் அந்தத் தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதிமுக அந்த தொகுதியில் உள்ளூர் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

எனவே அந்தத் தொகுதி மக்கள் அதிமுக வேட்பாளரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து மாபெரும் வெற்றியடையச்செய்வார்கள். அதிமுக வெற்றியென்பது உறுதி செய்யப்பட்ட வெற்றி " என்றார்

இதையும் படிங்க: 'ஆட்சி மாறும் மறுநாளே முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி'

Intro:*அதிமுக வேட்பாளர் மீது ஸ்டாலின் அவதூறாக பேசுவது யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை என்பது போல் உள்ளது - ஒரு விரலைக் கொண்டு ஒருவரை சுட்டிக் காண்பிக்கும் பொழுது நான்கு வீரல்கள் அவரை சுட்டிக்காட்டுகிறது என்பதை ஸ்டாலின் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி*Body:*அதிமுக வேட்பாளர் மீது ஸ்டாலின் அவதூறாக பேசுவது யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை என்பது போல் உள்ளது - ஒரு விரலைக் கொண்டு ஒருவரை சுட்டிக் காண்பிக்கும் பொழுது நான்கு வீரல்கள் அவரை சுட்டிக்காட்டுகிறது என்பதை ஸ்டாலின் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி*

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி:

திமுக வேட்பாளர் உள்ளூரில் இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இல்லை அவர் சென்னை மாவட்டத்தில் உள்ளார் சென்னையில் மாவட்டத்தில் உள்ளவருக்கு சென்னை சென்றால் தான் அங்கு உள்ள வழக்குகள் பற்றி தெரியும்.

அதிமுக வேட்பாளர்கள் மீது திமுக காலத்தில் போடப்பட்ட வழக்கு தான் நிரபராதி என்று தீர்ப்பு வந்துள்ளது வழக்கு இருந்தால் எப்படி தேர்தலில் நிற்க முடியும் அரசியல் வாதி என்றால் வழக்கு இருக்கதான் செய்யும்.

இவர்கள் வீட்டில் இல்லையா ஸ்டாலின் மீது வழக்கு ஸ்டாலின் தங்கை மீது வழக்கு, தாயார் மீது வழக்கு அவர்கள் குடும்பத்தில் யார் மீது வழக்கு இல்லை.

திமுகவில் உள்ள அனைவர் மீது ஊழல் புரிந்தவர்கள் என்று வழக்கு இருக்கிறது.

ஸ்டாலின் மீது 2011 -ல் நில அபகரிப்பு வழக்கு வந்துள்ளது துணை முதலமைச்சராக இருந்தவர், உள்ளாட்சி துறை மற்றும் பல துறை அமைச்சராக இருந்தவர் அவர் பக்கத்துவீட்டில் ஒருவரே நில அபகரிப்பு வழக்கு கொடுத்து முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பெட்டிசன் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க செல்லும் போது சமாதானமாகி விட்டார். அது நடந்ததா இல்லையா ஆகையால் இவரை ஒரு விரலை சுட்டிக் காண்பித்தார் என்றால் நான்கு விரல் அவரை சுட்டிக்காட்டுகிறது.

இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மக்கள் கூறுவது போல் யோக்கியன் வர்றான் சொம்ப தூக்கி உள்ள வை டா என்பது மாதிரி இவர் யோக்கியமாக நடந்துள்ளாரா?

தேர்தலுக்காக எதையாவது பேசுவது பொய்யான தகவல்களை கூறுவது பதவி வெறியுடன் இருக்கிறார் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்று கனவில் இருக்கிறார் அதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்.

முதலமைச்சர் அவர்கள் தொழில் துறை அமைச்சரும் எத்தனை ஆயிரம் நபர்களுக்கு வேலை கிடைத்தது என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

2015-ல் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது எத்தனை முதலீடுகள் இங்கு வந்துள்ளது எத்தனை தொழில்துறை ஆரம்பித்துள்ளார்கள் எத்தனை ஆரம்பகட்டத்தில் இருக்கின்றது என்று தெளிவாகக் கூறியுள்ளனர் அதேபோல் 2019 முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் எத்தனை போடப்பட்டுள்ளது எத்தனை பேர் தொழில் ஆரம்பித்து கொண்டிருக்கிறார்கள் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதெல்லாம் விளக்கமாக கூறியுள்ளார்கள்.

தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஸ்டாலினுக்கு விளக்கமாக கூறப்பட்டுள்ளது

அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த தொகுதியில் கிட்டத்தட்ட அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்ற முடியவில்லை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

ஏனென்றால் அங்கு அனைவரும் வெளியூர் வேட்பாளராகவே இருந்துள்ளனர் அதனால்அந்த தொகுதி வளர்ச்சி பெறாமல் போய்விட்டது, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.

உள்ளூர் வேட்பாளரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தற்போது நிறுத்தி உள்ளார்கள் எனவே அந்த தொகுதி மக்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைத்து ரெட்டியார்பட்டி நாராயணனை எல்லோரும் வரவேற்கிறார்கள் எனவே வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.