ETV Bharat / state

ரவிச்சந்திரன் விடுப்பு கோரிய வழக்கு பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

author img

By

Published : Jan 27, 2021, 7:50 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ravichandran seek leave case
ரவிச்சந்திரன் விடுப்பு கோரிய வழக்கு பிப்ரவரி 5ஆம் தேதி ஒத்திவைப்பு

மதுரை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார்.

இவ்வழக்கில், தொடர்புடைய சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில், ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் எனத் தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் தீர்மானம் இயற்றியது. இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.

கரோனா காலத்தி்ல எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்கக் கோரி மனு அனுப்பினேன், அதற்கு மத்திய அரசின் சட்டப்பிரிவின் கீழ் எனது மகன் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனைக் காரணம் காட்டி ஏற்கனவே தமிழ்நாடு அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதம் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிடவேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் இன்று(ஜனவரி 27) விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆளுநர் விரைவில் இதுகுறித்து முடிவெடுப்பார் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'ராஜிவ் கொலை வழக்கில் 7 பேருக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும்' - முதலைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்!

மதுரை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார்.

இவ்வழக்கில், தொடர்புடைய சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில், ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் எனத் தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் தீர்மானம் இயற்றியது. இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.

கரோனா காலத்தி்ல எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்கக் கோரி மனு அனுப்பினேன், அதற்கு மத்திய அரசின் சட்டப்பிரிவின் கீழ் எனது மகன் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனைக் காரணம் காட்டி ஏற்கனவே தமிழ்நாடு அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதம் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிடவேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் இன்று(ஜனவரி 27) விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆளுநர் விரைவில் இதுகுறித்து முடிவெடுப்பார் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'ராஜிவ் கொலை வழக்கில் 7 பேருக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும்' - முதலைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.