ETV Bharat / state

'தேசிய நெடுஞ்சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன்?' - Barricade on National Highways issue

மதுரை: தேசிய நெடுஞ்சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல்செய்திட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை
மதுரை
author img

By

Published : Dec 10, 2020, 2:09 PM IST

மதுரையைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளே, தற்போது பல விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. 2019ஆம் ஆண்டு 57 ஆயிரத்து 228 சாலை விபத்துகள் நிகழ்ந்த நிலையில் 67 ஆயிரத்து 132 பேர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொழிலகங்கள், நிறுவனங்கள் போன்றவை தங்கள் நிறுவனத்துக்கு முன்பாக உள்ள பொது சாலைகளில் விளம்பரம் செய்யும் வகையில் பேரிகார்டுகளை வைக்கின்றன. பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன. இது குறித்து உரிய அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே தமிழ்நாட்டின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும், எந்தெந்த இடங்களில் பேரிகார்டுகளை வைக்கலாம் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்

இந்நிலையில் இன்று, இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன? சாலைகளில் உள்ள பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்கள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து, அதிவேகமாக சென்றதாக எவ்வளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வேகத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், பேரிகார்டுகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மதுரையைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளே, தற்போது பல விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. 2019ஆம் ஆண்டு 57 ஆயிரத்து 228 சாலை விபத்துகள் நிகழ்ந்த நிலையில் 67 ஆயிரத்து 132 பேர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொழிலகங்கள், நிறுவனங்கள் போன்றவை தங்கள் நிறுவனத்துக்கு முன்பாக உள்ள பொது சாலைகளில் விளம்பரம் செய்யும் வகையில் பேரிகார்டுகளை வைக்கின்றன. பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன. இது குறித்து உரிய அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே தமிழ்நாட்டின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும், எந்தெந்த இடங்களில் பேரிகார்டுகளை வைக்கலாம் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்

இந்நிலையில் இன்று, இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன? சாலைகளில் உள்ள பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்கள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து, அதிவேகமாக சென்றதாக எவ்வளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வேகத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், பேரிகார்டுகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.