ETV Bharat / state

காணாமல் போன சிறுவன் வழக்கை டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Oct 20, 2019, 8:20 AM IST

மதுரை: மேலூர் அருகே காணாமல் போன மனவளர்ச்சி குன்றிய சிறுவனை கண்டுபிடித்து தர கோரிய வழக்கை மதுரை காவல் துணை கண்காணிப்பாளர் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை மாவட்டம், மேலூர் கோட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்த ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'எனது மகன் சிவனேஷ் (14). சற்று மனவளர்ச்சி குன்றியவர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட நாங்கள் மேலூருக்கு குடிவந்தோம். அழகர்கோவில் அருகேயுள்ள மனநலம் குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்து அவரை படிக்க வைத்தோம். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி காலை வீட்டருகே உள்ள கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற எனது மகனை காணவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனது வீட்டின் அருகே கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இவற்றை பார்த்தால் கூட எனது மகன் எங்கு சென்றான்? யாரும் கடத்தி சென்றார்களா என்பது தெரியும். போதுமான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறுவர்களைக் கடத்தி வடமாநிலங்களில் கொத்தடிமையாக வைத்து, உடல்பாகங்களை திருடி விற்பனை செய்வதாகத் தகவல் பரவுகிறது. எனவே, மேலூர் காவல்துறையினரிடம் உள்ள வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மேலூர் காவல்துறையினரிடம் இருந்து வழக்கை திரும்பப் பெற்று மதுரை சிபிசிஐடி (ஓசியூ) டிஎஸ்பி விசாரித்து, அதன் விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ஏரலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!

மதுரை மாவட்டம், மேலூர் கோட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்த ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'எனது மகன் சிவனேஷ் (14). சற்று மனவளர்ச்சி குன்றியவர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட நாங்கள் மேலூருக்கு குடிவந்தோம். அழகர்கோவில் அருகேயுள்ள மனநலம் குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்து அவரை படிக்க வைத்தோம். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி காலை வீட்டருகே உள்ள கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற எனது மகனை காணவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனது வீட்டின் அருகே கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இவற்றை பார்த்தால் கூட எனது மகன் எங்கு சென்றான்? யாரும் கடத்தி சென்றார்களா என்பது தெரியும். போதுமான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறுவர்களைக் கடத்தி வடமாநிலங்களில் கொத்தடிமையாக வைத்து, உடல்பாகங்களை திருடி விற்பனை செய்வதாகத் தகவல் பரவுகிறது. எனவே, மேலூர் காவல்துறையினரிடம் உள்ள வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மேலூர் காவல்துறையினரிடம் இருந்து வழக்கை திரும்பப் பெற்று மதுரை சிபிசிஐடி (ஓசியூ) டிஎஸ்பி விசாரித்து, அதன் விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ஏரலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!

Intro:காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர கோரிய வழக்கை மேலூர் போலீசாரிடம் இருந்து வழக்கை திரும்ப பெற்று மதுரை சிபிசிஐடி (ஓசியூ) டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர கோரிய வழக்கை மேலூர் போலீசாரிடம் இருந்து வழக்கை திரும்ப பெற்று மதுரை சிபிசிஐடி (ஓசியூ) டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மாவட்டம், மேலூர் கோட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்த ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் சிவனேஷ் (14). சற்று மனவளர்ச்சி குன்றியவர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட நாங்கள் மேலூருக்கு குடிவந்தோம். அழகர்கோவில் அருகேயுள்ள மனநலம் குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்து அவரை படிக்க வைத்தோம். கடந்த ஏப்.28ம் தேதி காலை வீட்டருகே உள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற எனது மகனை காணவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
எனது வீட்டின் அருகே கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இவற்றை பார்த்தால் கூட எனது மகன் எங்கு சென்றான், யாரும் கடத்தி சென்றார்களா என்பது தெரியும். போதுமான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கடத்தி வடமாநிலங்களில் கொத்தடிமையாக வைத்து, உடல்பாகங்களை திருடி விற்பனை செய்வதாக தகவல் பரவுகிறது. எனவே, மேலூர் போலீசில் உள்ள வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மேலூர் போலீசாரிடம் இருந்து வழக்கை திரும்ப பெற்று மதுரை சிபிசிஐடி (ஓசியூ) டிஎஸ்பி விசாரிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.