ETV Bharat / state

’பொங்கல் பரிசு விநியோகத்தில் தவறு ஏதும் நடைபெறாது’ - செல்லூர் ராஜூ

author img

By

Published : Jan 5, 2020, 7:13 PM IST

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் எந்தவிதமான தவறும் நடைபெறாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்துள்ளார்.

Pongal
Pongal

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பும், ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இந்த ஆண்டு ஒரு கோடியே 99 லட்சத்து 51 ஆயிரத்து 83 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இரண்டாயிரத்து 363 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ

வருகின்ற 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விடுமுறை இல்லாமல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு விநியோகத்தில் தவறு ஏதும் நடைபெறாது” என்றார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சேலத்தில் பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா: செம்மலை பங்கேற்பு!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பும், ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இந்த ஆண்டு ஒரு கோடியே 99 லட்சத்து 51 ஆயிரத்து 83 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இரண்டாயிரத்து 363 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ

வருகின்ற 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விடுமுறை இல்லாமல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு விநியோகத்தில் தவறு ஏதும் நடைபெறாது” என்றார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சேலத்தில் பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா: செம்மலை பங்கேற்பு!

Intro:*பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தில் எந்தவிதமான தவறும் ஏற்படாது,இதை முற்றிலும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி*

Visual send in mojoBody:
*பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தில் எந்தவிதமான தவறும் ஏற்படாது,இதை முற்றிலும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி*

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பயன்பெறும் 5792 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

இந்த நிகழ்வில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்,மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு,

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வழங்க கூடிய மற்றும் பொங்கல் பரிசு வழங்க கூடிய திட்டத்தை 2018 அன்று துவங்கி வைத்தார்,அதற்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது,நல்ல 13ம் தேதி வரை பொங்கல் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது,
10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைகள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,4,55,041 பேர் சீனி குடும்ப அட்டையிலிருந்து அரிசி குடும்ப அட்டைகளை மாற்றிக் கொண்டுள்ளனர்,இந்த ஆண்டு ஒரு கோடியே 99 லட்சத்து 51 ஆயிரத்து 83 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது, 2363 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
1950 கோடி ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை பரிசாக வழங்குவதற்கு தமிழக முதல்வர் நிதியாக ஒதுக்கப்பட்டு வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது,8 லட்சத்து 22 ஆயிரத்து 493 குடும்ப அட்டைகள் மதுரை மாவட்டத்தில் பயனடைகிறார்கள்,
வருகிற 9ம் தேதி முதல் 13-ம் தேதி வரை விடுமுறை இல்லாமல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கு வதற்கு தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,இந்த விநியோகத்தில் எந்தவிதமான தவறும் ஏற்படாது,இதை முற்றிலும் மாவட்ட ஆட்சியர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார், இதனைத் தொடர்ந்து அரசியல் கேள்விகளுக்கு,
அரசு விழாவில் அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.


Visual sent in mojoConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.