ETV Bharat / state

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற பிறமாநில மாணவர்களுக்கு நோட்டீஸ்

author img

By

Published : Aug 19, 2019, 6:43 PM IST

மதுரை: மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்ற பிறமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வு குறித்த மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,'தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிறமாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் இரண்டாயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும், நூற்று 26 பிறமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். எனவே,தமிழக மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் .

மேலும், தமிழக இளங்கலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு ஏற்கனேவே விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க தமிழக அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று நீதிபதி சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வெளிமாநில மாணவர்கள் என கூறப்படும் 126 மாணவர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்துள்ளது. மாணவர்கள் எதன் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொண்டனர் என்பது குறித்தும், அவர்களின் இருப்பிடச் சான்று குறித்தும் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வு குறித்த மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,'தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிறமாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் இரண்டாயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும், நூற்று 26 பிறமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். எனவே,தமிழக மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் .

மேலும், தமிழக இளங்கலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு ஏற்கனேவே விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க தமிழக அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று நீதிபதி சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வெளிமாநில மாணவர்கள் என கூறப்படும் 126 மாணவர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்துள்ளது. மாணவர்கள் எதன் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொண்டனர் என்பது குறித்தும், அவர்களின் இருப்பிடச் சான்று குறித்தும் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Intro:Body:

தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் #MedicalCounselling


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.