ETV Bharat / state

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு! - நாடாளுமன்றம்

மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் மாநில குழு உறுப்பினரான சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார் .

1
author img

By

Published : Mar 15, 2019, 5:57 PM IST

மதுரை மாவட்டம் ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் சு வெங்கடேசன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் கலைஇலக்கிய பிரிவான தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.

இவர் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நூலுக்காக கடந்த 2011ஆம் ஆண்டில் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

இவரின் 'காவல் கோட்டம்' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலனின் 'அரவான்' திரைப்படம் வெளியானது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி என்ற அகழ்வாய்வு தளத்தை வெளிக் கொண்டு வருவதிலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடைபெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை வெங்கடேசன் நடத்தியுள்ளார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார் அதில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட ஏகே ராஜாவிடம் தோல்வியை தழுவினார்.

அதற்குப் பிறகு தேர்தலில் பங்கேற்காமல் கட்சி பணியில் ஈடுபட்டு வந்த சு வெங்கடேசன் தற்போது முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் சு வெங்கடேசன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் கலைஇலக்கிய பிரிவான தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.

இவர் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நூலுக்காக கடந்த 2011ஆம் ஆண்டில் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

இவரின் 'காவல் கோட்டம்' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலனின் 'அரவான்' திரைப்படம் வெளியானது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி என்ற அகழ்வாய்வு தளத்தை வெளிக் கொண்டு வருவதிலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடைபெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை வெங்கடேசன் நடத்தியுள்ளார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார் அதில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட ஏகே ராஜாவிடம் தோல்வியை தழுவினார்.

அதற்குப் பிறகு தேர்தலில் பங்கேற்காமல் கட்சி பணியில் ஈடுபட்டு வந்த சு வெங்கடேசன் தற்போது முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அக் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் தமுஎகச அமைப்பின் தண்டத்தலைவர் மாநிலத் தலைவருமான சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்


Body:மதுரை மாவட்டம் ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் சு வெங்கடேசன் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது அதன் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் அக்கட்சியின் கலைஇலக்கிய பிரிவான தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் செயலாற்றி வருகிறார்

இவர் எழுதிய காவல் கோட்டம் என்ற நூலுக்காக கடந்த 2011ஆம் ஆண்டில் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் காவல்கோட்டம் மட்டுமன்றி மேலும் பல்வேறு புதினங்கள் நாவல்கள் கட்டுரைத் தொகுப்புகள் என பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார் இவரது காவல் கோட்டம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலனின் அரவான் திரைப்படம் வெளியானது மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி என்ற அகழ்வாய்வு தளத்தை வெளிக் கொண்டு வருவதிலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடைபெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உறுதுணையாக நின்றவர்

மதுரையின் வரலாற்று பெருமைகளை பறைசாற்றும் மாமதுரை போற்றுவோம் என்ற மிகப்பெரும் நிகழ்வை நடத்தி மதுரை மக்களின் பாராட்டைப் பெற்றவர்

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார் அதில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட ஏகே ராஜாவிடம் தோல்வியை தழுவினார்

அதற்குப் பிறகு தேர்தலில் பங்கேற்காமல் கட்சி பணியில் ஈடுபட்டு வந்த சு வெங்கடேசன் தற்போது முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

i will attached some photos through FTP





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.