ETV Bharat / state

சர்ச்சையில் சிக்கிய மலாச்சி யானை திருச்சி காப்பகத்துக்கு மாற்றம்! - திருச்சி வனவிலங்குகள் பாதுகாப்பகம்

மதுரை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி மலாச்சி யானையை மதுரையிலிருந்து திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள வன உயிர் காப்பகத்தில் வனத் துறையினர் ஒப்படைத்தனர்.

malachi-elephant
author img

By

Published : Sep 9, 2019, 2:37 PM IST

கடந்த 2007ஆம் ஆண்டு அந்தமானை சேர்ந்த ஆங்மின்ட்-மேஸன் தம்பதி மதுரை மீனாட்சி கோயிலுக்கு தாங்கள் வளர்த்துவந்த மலாச்சி என்ற யானையை தானமாக வழங்கினர். மலாச்சியை கோயில் ஊழியராக பணியாற்றும் பாகன் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் பராமரித்துவந்தனர்.

இந்நிலையில் மலாச்சி யானை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒப்படைக்கப்படாமல் தெருக்களில் பிச்சை எடுக்கவும் திருமண விழாக்களில் பங்கேற்கவும் பழக்கப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக முரளிதரன் என்ற விலங்குகள் நல ஆர்வலர் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் மலாச்சி யானை வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி தற்காலிகமாக விலங்குகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும் அத்தீர்ப்பில் யானையை சித்ரவதை செய்ததாக அதன் காப்பாளர் லட்சுமணன்-இந்திரா தம்பதிக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

மலாச்சி யானைக்கு மருத்துவர் சிகிச்சை

மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மலாச்சி யானைக்காக தனி யானை பராமரிப்பு இடம் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிலையில், பாகன் லட்சுமணன் அதனை பராமரித்துவந்தார். இதையடுத்து யானையை வனவிலங்குகள் காப்பகம் உள்ள திருச்சி எம்.ஆர். பாளையத்திற்குக் கொண்டுசெல்ல வனத் துறை முடிவு செய்திருந்தது. தொடர்ந்து இரண்டு முறை யானையை திருச்சிக்கு கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் யானையின் உடல்நிலை காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

இதனிடையே மூன்றாவது முறையாக திருச்சி காப்பகத்திற்கு மலாச்சி யானை கொண்டுசெல்லப்படுவதற்கான ஏற்பாடுகளை மதுரை வனத் துறை மேற்கொண்டது. திருநெல்வேலி வனத் துறையின் வனவிலங்கு உதவி மருத்துவர் சுகுமார் யானையை பரிசோதனை செய்தார். இப்பரிசோதனையின்போது வனத் துறை அலுவலர்கள் மற்றும் யானையை பராமரிக்கும் பாகன்கள் குமார், அழகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

யானை வனத் துறை வாகனத்தின் மூலம் கொண்டுசெல்வதற்கு ஏற்ற வகையில் உடல் நலத்துடன் இருப்பதாகவும், யானையைக் கொண்டுசெல்ல எந்தவிதத் தடையும் இல்லை என்றும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

elephant-transferred-to-trichy-archive
திருச்சி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட மலாச்சி யானை

இந்த நிலையில், யானையைக் கொண்டுசெல்வதற்காக கோவை வனக்கோட்டத்திற்குச் சொந்தமான சாடிவயல் யானைகள் முகாமைச் சேர்ந்த கனரக வாகனம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மலாச்சி யானை அங்கு ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2007ஆம் ஆண்டு அந்தமானை சேர்ந்த ஆங்மின்ட்-மேஸன் தம்பதி மதுரை மீனாட்சி கோயிலுக்கு தாங்கள் வளர்த்துவந்த மலாச்சி என்ற யானையை தானமாக வழங்கினர். மலாச்சியை கோயில் ஊழியராக பணியாற்றும் பாகன் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் பராமரித்துவந்தனர்.

இந்நிலையில் மலாச்சி யானை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒப்படைக்கப்படாமல் தெருக்களில் பிச்சை எடுக்கவும் திருமண விழாக்களில் பங்கேற்கவும் பழக்கப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக முரளிதரன் என்ற விலங்குகள் நல ஆர்வலர் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் மலாச்சி யானை வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி தற்காலிகமாக விலங்குகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும் அத்தீர்ப்பில் யானையை சித்ரவதை செய்ததாக அதன் காப்பாளர் லட்சுமணன்-இந்திரா தம்பதிக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

மலாச்சி யானைக்கு மருத்துவர் சிகிச்சை

மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மலாச்சி யானைக்காக தனி யானை பராமரிப்பு இடம் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிலையில், பாகன் லட்சுமணன் அதனை பராமரித்துவந்தார். இதையடுத்து யானையை வனவிலங்குகள் காப்பகம் உள்ள திருச்சி எம்.ஆர். பாளையத்திற்குக் கொண்டுசெல்ல வனத் துறை முடிவு செய்திருந்தது. தொடர்ந்து இரண்டு முறை யானையை திருச்சிக்கு கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் யானையின் உடல்நிலை காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

இதனிடையே மூன்றாவது முறையாக திருச்சி காப்பகத்திற்கு மலாச்சி யானை கொண்டுசெல்லப்படுவதற்கான ஏற்பாடுகளை மதுரை வனத் துறை மேற்கொண்டது. திருநெல்வேலி வனத் துறையின் வனவிலங்கு உதவி மருத்துவர் சுகுமார் யானையை பரிசோதனை செய்தார். இப்பரிசோதனையின்போது வனத் துறை அலுவலர்கள் மற்றும் யானையை பராமரிக்கும் பாகன்கள் குமார், அழகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

யானை வனத் துறை வாகனத்தின் மூலம் கொண்டுசெல்வதற்கு ஏற்ற வகையில் உடல் நலத்துடன் இருப்பதாகவும், யானையைக் கொண்டுசெல்ல எந்தவிதத் தடையும் இல்லை என்றும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

elephant-transferred-to-trichy-archive
திருச்சி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட மலாச்சி யானை

இந்த நிலையில், யானையைக் கொண்டுசெல்வதற்காக கோவை வனக்கோட்டத்திற்குச் சொந்தமான சாடிவயல் யானைகள் முகாமைச் சேர்ந்த கனரக வாகனம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மலாச்சி யானை அங்கு ஒப்படைக்கப்பட்டது.

Intro:நீதிமன்ற உத்தரவை அடுத்து மலாச்சி யானை திருச்சி வன உயிர் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

மதுரை தெருக்களில் பிச்சை எடுக்க வைத்தும் திருவிழாக்களில் வாடகைக்கு விடப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மலாச்சி யானை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வனத்துறையால் மீட்கப்பட்டு திருச்சி எம் ஆர் பாளையத்தில் உள்ள வன உயிர் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுBody:நீதிமன்ற உத்தரவை அடுத்து மலாச்சி யானை திருச்சி வன உயிர் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

மதுரை தெருக்களில் பிச்சை எடுக்க வைத்தும் திருவிழாக்களில் வாடகைக்கு விடப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மலாச்சி யானை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வனத்துறையால் மீட்கப்பட்டு திருச்சி எம் ஆர் பாளையத்தில் உள்ள வன உயிர் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

கடந்த 2007ஆம் ஆண்டு அந்தமானை சேர்ந்த ஆங்மின்ட் மற்றும் மேஸன் தம்பதியரிடம் இருந்து மதுரை மீனாட்சி கோவிலில் ஊழியராக பணியாற்றும் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் தானமாகப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் மலாச்சி யானை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒப்படைக்கப்படாமல் தெருக்களில் பிச்சை எடுக்கவும் திருமண விழாக்களில் பங்கேற்கவும் பழக்கப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக முரளிதரன் என்ற விலங்கு நல ஆர்வலரால் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மலாச்சி யானை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி தற்காலிகமாக விலங்குகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. மேலும் அத்தீர்ப்பில் யானையை சித்திரவதை செய்ததாக அதன் காப்பாளர் இந்திராவிற்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மலாச்சி யானைக்கு என்று தனியாக யானை பராமரிப்பு இடம் நீதிமன்ற உத்தரவால் அமைக்கப்பட்டு இந்திராவின் கணவர் லட்சுமணனால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், யானையை வனவிலங்குகள் காப்பகம் உள்ள திருச்சி எம்.ஆர்.பாளையத்திற்குக் கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்திருந்தது. இரண்டு முறை யானை கொண்டு செல்லப்படுவதற்கான முன்னேற்பாடுகள் தென்பழஞ்சியில் மேற்கொள்ளப்பட்டு பின்னர் யானையின் உடல்நிலை காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

இதற்கிடையே திருச்சிக்கு அருகேயுள்ள எம் ஆர் பாளையத்திற்கு மலாச்சி யானை கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகளை மதுரை வனத்துறை மேற்கொண்டது. திருநெல்வேலி வனத்துறையின் வனவிலங்கு உதவி மருத்துவர் சுகுமார் யானையை பரிசோதனை செய்தார். இப் பரிசோதனையின் போது வனத்துறை அதிகாரிகள் மற்றும் யானையை பராமரிக்கும் பாகன்கள் குமார் மற்றும் அழகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

யானை திருச்சி எம் ஆர் பாளையத்திற்கு வனத்துறை வாகனத்தின் மூலமாக கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் உடல் நலத்துடன் இருப்பதாகவும் ஆகையால் யானையைக் கொண்டு செல்ல எந்தவித தடையும் இல்லை என்றும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யானையைக் கொண்டு செல்வதற்காக கோவை வனக்கோட்டத்திற்குச் சொந்தமான சாடிவயல் யானைகள் முகாமைச் சேர்ந்த கனரக வாகனம் கொண்டுவரப்பட்டது. மருத்துவர் தரப்பு சோதனை முடிவடைந்தவுடன் திருச்சி எம் ஆர் பாளையத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பகத்திற்கு மலரச்சி யானை கொண்டு செல்லப்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.