ETV Bharat / state

நெல்லையுடன் சேர்க்கப்படுமா ஆலங்குளம் - செக் வைத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: ஆலங்குளத்தை தென்காசியுடன் இணைக்கக் கூடாது என கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Sep 18, 2019, 12:14 PM IST

madurai high court bench

நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி தனிமாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்துடன் ஆலங்குளத்தை இணைக்காமல் நெல்லையுடனே இருக்க வேண்டும் என்று ஆலங்குளம் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆலங்குளத்தை சேர்ந்த பொன்னுத்துரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார் .

அம்மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதற்கென்று சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திலும், அன்று மாலை 3 மணிக்கு குற்றாலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

ஆனால், இதில் பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை. அதில்,பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை, பெரும்பாலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே பொதுமக்கள் போல் கலந்து கொண்டனர். இந்தக் கருத்து கேட்புக் கூட்டத்தில், பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை. போதிய விளம்பரம் செய்யப்படவில்லை .ஆலங்குளத்தில் வசிக்கும் மக்கள் தென்காசி செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 32 கல்லூரிகள் உள்ளன, தென்காசியில் 2 கல்லூரிகள் மட்டுமே உள்ளது. எனவே ஆலங்குளத்தை , தென்காசி மாவட்டத்துடன் சேர்க்காமல் தற்போது உள்ளபடி நெல்லை மாவட்டத்துடனே இருக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்பின்னர், தென்காசி மாவட்டத்தில் எந்த தாலுகாக்களை இணைக்கப்படும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி தனிமாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்துடன் ஆலங்குளத்தை இணைக்காமல் நெல்லையுடனே இருக்க வேண்டும் என்று ஆலங்குளம் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆலங்குளத்தை சேர்ந்த பொன்னுத்துரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார் .

அம்மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதற்கென்று சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திலும், அன்று மாலை 3 மணிக்கு குற்றாலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

ஆனால், இதில் பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை. அதில்,பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை, பெரும்பாலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே பொதுமக்கள் போல் கலந்து கொண்டனர். இந்தக் கருத்து கேட்புக் கூட்டத்தில், பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை. போதிய விளம்பரம் செய்யப்படவில்லை .ஆலங்குளத்தில் வசிக்கும் மக்கள் தென்காசி செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 32 கல்லூரிகள் உள்ளன, தென்காசியில் 2 கல்லூரிகள் மட்டுமே உள்ளது. எனவே ஆலங்குளத்தை , தென்காசி மாவட்டத்துடன் சேர்க்காமல் தற்போது உள்ளபடி நெல்லை மாவட்டத்துடனே இருக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்பின்னர், தென்காசி மாவட்டத்தில் எந்த தாலுகாக்களை இணைக்கப்படும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Intro:ஆலங்குளத்தை தென்காசியுடன் இணைக்க கூடாது என கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஆலங்குளத்தை, தென்காசி மாவட்டத்துடன் இணைக்காமல் தற்போது உள்ளபடி நெல்லை மாவட்டத்துடனேயே இணைந்து இருக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதி பொது மக்களின் கருத்துகளை கேட்காமல் மாவட்டத்தை பிரிக்கும் வகையில் எந்தவித பணிகளும் நடைபெற கூடாது எனவும் உத்தரவிட கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:ஆலங்குளத்தை தென்காசியுடன் இணைக்க கூடாது என கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஆலங்குளத்தை, தென்காசி மாவட்டத்துடன் இணைக்காமல் தற்போது உள்ளபடி நெல்லை மாவட்டத்துடனேயே இணைந்து இருக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதி பொது மக்களின் கருத்துகளை கேட்காமல் மாவட்டத்தை பிரிக்கும் வகையில் எந்தவித பணிகளும் நடைபெற கூடாது எனவும் உத்தரவிட கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தற்போது இந்த விஷயம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு தொடர்ந்து பல்வேறு வகைகளில்,பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது,அதன் பின் தென்காசிமாவட்டத்தில் எந்த எந்த தாலுகாகளை சேர்ப்பது என முடிவு செய்யப்படும் -அரசு தரப்பு வழக்கறிஞர்.

ஆலங்குளத்தை சேர்ந்த பொன்னுத்துரை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் . அதில்,
திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து , தென்காசியை கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் ஆகஸ்டு மாதம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இதற்கென நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி லும், அன்று மாலை 3 மணி அளவில் குற்றாலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.ஆனால் இதில் பொதுமக்களின் கருத்து கேட்கப்பட வில்லை.அதில்,பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை, பெரும்பாலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே பொதுமக்கள் போல் கலந்து கொண்டன ர்.இந்த கருத்து கேட்பு கூட்டத்தில், பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை. போதிய விளம்பரம் செய்யப்படவில்லை .

இந்த நிலையில், ஆலங்குளத்தில் பகுதியில் உள்ள பாப்பாகுடி, முக்கூடல் , ரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மாணவர்கள், திருநெல்வேலியில், பல ஆண்டுகளாக வணிகம்,காய்கறி சந்தை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். ஆலங்குளம் பகுதி , திருநெல்வேலிக்கு மிக அருகில் உள்ளது. ஆனால், ஆலங்குளத்தில் இருந்து தென்காசி செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை, தென்காசியை சென்றடைய பயண நேரம். அதிகமாகும். மேலும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, தென்காசி பாராளுமன்ற தொகுதி யுடன் இணைந்துள்ளது .. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 32 கல்லூரிகலும், தென்காசியில் 2 கல்லூரிகள் தான் உள்ளன. எனவே ஆலங்குளத்தை , தென்காசி மாவட்டத்துடன் சேர்க்காமல் தற்போது உள்ளபடி நெல்லை மாவட்டத்துடனே இருக்க. உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஆலங்குளம்,சங்கரன் கோவில் பகுதிகளில் உரிய முறையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன்பின்பு மாவட்டத்தை பிரிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,அதுவரை மாவட்ட.த்தை பிரிக்கும் வகையில் எந்தவித பணிகளும் நடைபெற கூடாது என உத்தரவிட வேண்டும் , என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது,அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்,பொது மக்களிடம் கருத்து கேட்பு தொடர்ந்து பல்வேறு வகைகளில்,பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. தற்போது அந்த பணி நடந்து வருகிறது, அதன் பின் தென்காசி மாவட்டத்தில் எந்த எந்த தாலுகாகளை சேர்ப்பது என முடிவு செய்யப்படும் என கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.