ETV Bharat / state

போக்குவரத்து துறை இயக்குநரை எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய பேருந்துகள் பொதும நல வழக்க்கு

மதுரை : தென் மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள் இயக்க கோரிய வழக்கில் போக்குவரத்து துறை இயக்குநரை எதிர் மனுதரராகச் சேர்க்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

madurai high court
madurai high court
author img

By

Published : Feb 5, 2020, 8:49 AM IST

நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், "தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறன. இதனால் அரசுக்கு அதிகப் படியான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாடு அரசு ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய நகரங்களில் புதிதாக ஆயிரம் பேருந்துகளை இயக்குகிறது. ஆனால் அவை அனைத்து வழி தடங்களிலும் செல்லாமல், முக்கிய வழி தடங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் தனியார் பேருந்துகள் அதிக லாபம் ஈட்டுகின்றன. இதற்கு அரசு அலுவலர்கள் உடந்தையாகச் செயல்படுகிறார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசின் புதிய பேருந்துகளை தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களின் பெயர், ஆதார் எண்ணை அந்தந்த பேருந்தில் ஒட்ட வேண்டும். இதுதொடர்பாக அலுலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுவின் அடிப்படையில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் போக்குவரத்து துறை இயக்குநரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : 'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து

நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், "தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறன. இதனால் அரசுக்கு அதிகப் படியான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாடு அரசு ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய நகரங்களில் புதிதாக ஆயிரம் பேருந்துகளை இயக்குகிறது. ஆனால் அவை அனைத்து வழி தடங்களிலும் செல்லாமல், முக்கிய வழி தடங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் தனியார் பேருந்துகள் அதிக லாபம் ஈட்டுகின்றன. இதற்கு அரசு அலுவலர்கள் உடந்தையாகச் செயல்படுகிறார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசின் புதிய பேருந்துகளை தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களின் பெயர், ஆதார் எண்ணை அந்தந்த பேருந்தில் ஒட்ட வேண்டும். இதுதொடர்பாக அலுலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுவின் அடிப்படையில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் போக்குவரத்து துறை இயக்குநரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : 'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து

Intro:தனியார் பேருந்துகளின் உரிமையாளரின் பெயர் மற்றும் ஆதார் எண்ணை அந்தந்த பேருந்தின் முன் ஒட்டவும்,தென் மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள் இயக்க கோரிய வழக்கில் போக்குவரத்து துறை இயக்குனரை எதிர் மனுதரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:தனியார் பேருந்துகளின் உரிமையாளரின் பெயர் மற்றும் ஆதார் எண்ணை அந்தந்த பேருந்தின் முன் ஒட்டவும்,தென் மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள் இயக்க கோரிய வழக்கில் போக்குவரத்து துறை இயக்குனரை எதிர் மனுதரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நெல்லையை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,

அதில் " தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறது, இதனால் அரசுக்கு அதிக படியான வருவாய் இழப்பு ஏற்படுகிறது.மேலும் தற்போது தமிழக அரசு 1000 புதிய பேருந்துகளை ஈரோடு,நாமக்கல், கரூர்,சேலம் ஆகிய நகரங்களில் இயக்குகிறது.ஆனால் அவை அனைத்து வழி தடங்களில் செல்லாமல்,முக்கிய வழி தடங்களில் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் அதிக லாபம் ஈட்டுகிறது.இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகிறார்கள். மேலும் தமிழக அரசின் புதிய பேருந்துகளை தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்க எவ்வித நடவடிக்கையம் எடுக்கவில்லை. மேலும் தனியார் பேருந்துகளின் உரிமையாளரின் பெயர் மற்றும் ஆதார் எண்ணை அந்தந்த பேருந்தின் முன் ஒட்ட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே மனுவின் அடிப்படையில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி,ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது,அப்போது மனுவில் போக்குவரத்து துறை இயக்குனரை எதிர் மனுதரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.