ETV Bharat / state

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!

மதுரை: திருமங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான் மசாலா மற்றும் போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

author img

By

Published : Dec 15, 2020, 3:16 PM IST

tobacco
tobacco

மதுரை திருமங்கலம் நகர் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடிகள் தயார் செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

tobacco
பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி பண்டல்

இந்தத் தகவலின் பேரில் திருமங்கலம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் குடோனில் பதுக்கி வைத்து குட்கா, பான் மசாலா போலி பீடிகள் தயாரித்தும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

tobacco
கைது செய்யப்பட்ட கண்ணன்

இதனையடுத்து காவல் துறையினர் கண்ணனை கைது செய்து அவரது குடேனிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

மதுரை திருமங்கலம் நகர் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடிகள் தயார் செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

tobacco
பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி பண்டல்

இந்தத் தகவலின் பேரில் திருமங்கலம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் குடோனில் பதுக்கி வைத்து குட்கா, பான் மசாலா போலி பீடிகள் தயாரித்தும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

tobacco
கைது செய்யப்பட்ட கண்ணன்

இதனையடுத்து காவல் துறையினர் கண்ணனை கைது செய்து அவரது குடேனிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.