ETV Bharat / state

மதுரையில் பெய்த கனமழையால் 2500 வாழைமரங்கள் சேதம்!

author img

By

Published : Apr 30, 2019, 7:57 PM IST

மதுரை: அலங்காநல்லூர், சோழவந்தான் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 2500க்கும் மேற்பட்ட வாழைமரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அலங்கநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான், பால்மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டி மக்கள் அவதியடைந்தனர். அதேபோல் முடுவார்பட்டியில் பலத்த காற்று வீசியதில், மாடசாமி என்பவர் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மதுரையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு

மேலும், சோழவந்தான் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் சுமார் 12 ஏக்கரில் பயிரிடப்பட்ட 2500 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அலங்கநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான், பால்மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டி மக்கள் அவதியடைந்தனர். அதேபோல் முடுவார்பட்டியில் பலத்த காற்று வீசியதில், மாடசாமி என்பவர் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மதுரையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு

மேலும், சோழவந்தான் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் சுமார் 12 ஏக்கரில் பயிரிடப்பட்ட 2500 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
30.04.2019


*மதுரை அலங்காநல்லூர் சோழவந்தான் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 2500 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் நாசம் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதி*

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று இரவு பெய்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான், பாலமேடு பகுதிகளில் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து மின்கம்பங்கள் சாலையில் விழுந்ததால் இரவு முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது

முடுவார்பட்டியில் பலமாக அடித்த சூறாவளி காற்றால் மாடசாமி என்பவரது வீட்டின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்கப்பட்டது

சோழவந்தான் பகுதியில் சுமார் 12 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் நேற்று இரவு அடித்த சூறாவளி காற்றால் 2500 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன

தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.




Visual send in ftp
Visual name : TN_MDU_03_30_HURRICANE WINDS WINDS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.