ETV Bharat / state

கொடைக்கானலின் வளத்தைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு! - இயற்கை வளத்தை பாதுகாக்க

மதுரை: இயற்கை வளத்தை பாதுகாக்க, உணவக விடுதி கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

High Court of Madurai
author img

By

Published : Aug 20, 2019, 7:49 AM IST

கொடைக்கானல் உணவக விடுதி உரிமையாளர்கள் சங்கச் செயலர் அப்துல் கனி ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும் வரை விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுவாமிநாதன் அமர்வு ,"2009இல் பாதரச ஆலை காரணமாக சுற்றுச்சூழல் மாசடைந்தது. இதனால் அந்த ஆலை மூடப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அனுமதிக்க முடியாது. ஆக்கிரமிப்பு கட்டடங்கள், விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் 2004இல் உரிய உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அந்த உத்தரவை அலுவலர்கள் நிறைவேற்றவில்லை. தற்போது கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமலுக்கு வந்துள்ளது. புதிய மாஸ்டர் பிளான் அரசின் இணையதளத்தில் மார்ச் மாதம் வெளியானது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

அதன்படி, இயற்கை வளத்தை பாதுகாக்க உணவக விடுதி கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு நடத்தி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை அரசின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும். அது தொடர்பாக பொதுமக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

கொடைக்கானல் உணவக விடுதி உரிமையாளர்கள் சங்கச் செயலர் அப்துல் கனி ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும் வரை விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுவாமிநாதன் அமர்வு ,"2009இல் பாதரச ஆலை காரணமாக சுற்றுச்சூழல் மாசடைந்தது. இதனால் அந்த ஆலை மூடப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அனுமதிக்க முடியாது. ஆக்கிரமிப்பு கட்டடங்கள், விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் 2004இல் உரிய உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அந்த உத்தரவை அலுவலர்கள் நிறைவேற்றவில்லை. தற்போது கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமலுக்கு வந்துள்ளது. புதிய மாஸ்டர் பிளான் அரசின் இணையதளத்தில் மார்ச் மாதம் வெளியானது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

அதன்படி, இயற்கை வளத்தை பாதுகாக்க உணவக விடுதி கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு நடத்தி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை அரசின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும். அது தொடர்பாக பொதுமக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Intro:கொடைக்கானல் இயற்கை வளத்தை பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு

கொடைக்கானலில் இயற்கை வளத்தை பாதுகாக்க, கொடைக்கானல் ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை Body:கொடைக்கானல் இயற்கை வளத்தை பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு

கொடைக்கானலில் இயற்கை வளத்தை பாதுகாக்க, கொடைக்கானல் ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு நடத்தி, உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சீசன் நேரங்களில் அதிக வாகன போக்குவரத்து காரணமாக கொடைக்கானலில் காற்று மாசு ஏற்படுவதால், தேவைப்படும் பட்சத்தில் வாகனங்களை மலை அடிவாரத்திலேயே நிறுத்திவிட்டு, சூரிய சக்தி மூலம் இயங்கும் வாகனங்கள், மின்னணு பொது போக்குவரத்து வாகனங்களை பயன்பாட்டிற்கு கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கச் செயலர் அப்துல்கனிராஜா, உயர் நீதிமன்ற கிளையில் ,"கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும் வரை விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுவாமிநாதன் அமர்வு ," 2009ல் பாதரச ஆலை காரணமாக சுற்றுச்சூழல் மாசடைந்தது. இதனால் அந்த ஆலை மூடப்பட்டது.

கொடைக்கானல் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அனுமதிக்க முடியாது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், விதிமீறல் கட்டிடங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் 2004-ல் உரிய உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

தற்போது கொடைக்கானல் நகராட்சி புதிய மாஸ்டர் பிளான் அமலுக்கு வந்துள்ளது. புதிய மாஸ்டர் பிளான் அரசின் இணையளத்தில் மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் இயற்கை வளத்தை பாதுகாக்க கொடைக்கானல் ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு நடத்தி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை அரசின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும். அது தொடர்பாக பொதுமக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

தொடர்ந்து சீசன் நேரங்களில் அதிக வாகன போக்குவரத்து காரணமாக காற்று மாசு ஏற்படுவதால், தேவைப்படும் பட்சத்தில் வாகனங்களை மலை அடிவாரத்திலேயே நிறுத்திவிட்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூரிய சக்தி மூலம் இயங்கும் வாகனங்கள், மின்னணு பொது போக்குவரத்து வாகனங்களை பயன்பாட்டிற்கு கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.