ETV Bharat / state

2024 ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது! - decision meeting on jallikattu 2024

மதுரை மாவட்டத்தில் தை முதல் நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

2024 ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
2024 ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 10:17 PM IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் தை முதல் நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று(டிச.23) நடைபெற்றது. இதில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களிலும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறவிருப்பதையடுத்து இன்று(டிச.23) மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் துறை ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் போது விழா கமிட்டியின் சார்பாக கே.கே கண்ணன் என்பவர் பேசியதாவது, "ஒவ்வொரு முறையும் தென்கால் பாசன விவசாயிகளின் சார்பாகவே ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெறும். ஆனால் ஒரு சிலர் இடையூறு விளைவித்ததனால், கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. கிராம முறைப்படி எங்கள் சங்கமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்" என்று ஆட்சியர் முன்பு கோரிக்கை வைத்தனர்.

காளையின் உரிமையாளர்களைப் பொறுத்தவரையில், "மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக டோக்கன் வழங்கப்பட்டாலும் கூட, வரிசையின் படி மாடுகள் செல்லாமல் கடைசியில் இருக்கக்கூடிய மாடுகள் கூட முதலிடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இது போன்ற குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் பேசியதாவது, "பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும். எந்தவித குளறுபடிகளுக்கும் இந்த முறை வாய்ப்பு இருக்காது. பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் ஆகியோரும் காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர்: பணி விதிகள், தொழில்நுட்பம் பயிற்சிக்குப் பின் நடைபெற்ற 2 தேர்வின் அடிப்படையில் பணிமூப்பு பட்டியலைத் தயாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மதுரை: மதுரை மாவட்டத்தில் தை முதல் நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று(டிச.23) நடைபெற்றது. இதில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களிலும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறவிருப்பதையடுத்து இன்று(டிச.23) மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் துறை ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் போது விழா கமிட்டியின் சார்பாக கே.கே கண்ணன் என்பவர் பேசியதாவது, "ஒவ்வொரு முறையும் தென்கால் பாசன விவசாயிகளின் சார்பாகவே ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெறும். ஆனால் ஒரு சிலர் இடையூறு விளைவித்ததனால், கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. கிராம முறைப்படி எங்கள் சங்கமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்" என்று ஆட்சியர் முன்பு கோரிக்கை வைத்தனர்.

காளையின் உரிமையாளர்களைப் பொறுத்தவரையில், "மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக டோக்கன் வழங்கப்பட்டாலும் கூட, வரிசையின் படி மாடுகள் செல்லாமல் கடைசியில் இருக்கக்கூடிய மாடுகள் கூட முதலிடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இது போன்ற குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் பேசியதாவது, "பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும். எந்தவித குளறுபடிகளுக்கும் இந்த முறை வாய்ப்பு இருக்காது. பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் ஆகியோரும் காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர்: பணி விதிகள், தொழில்நுட்பம் பயிற்சிக்குப் பின் நடைபெற்ற 2 தேர்வின் அடிப்படையில் பணிமூப்பு பட்டியலைத் தயாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.