ETV Bharat / state

மதுரையில் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மதுரை: கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

author img

By

Published : Sep 5, 2020, 10:06 PM IST

கரோனா பாதிப்பு: மதுரையில் கரோனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Corona cases in madurai

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்துவருகிறது. மேலும், கரோனாவால் சிகிச்சைப் பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 5) 99 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 674ஆக உயர்ந்துள்ளது.

இதில், இன்று (செப்டம்பர் 5) 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 376 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட எவரும் இன்று உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிகிச்சைப் பலனின்றி 364 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 934 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்துவருகிறது. மேலும், கரோனாவால் சிகிச்சைப் பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 5) 99 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 674ஆக உயர்ந்துள்ளது.

இதில், இன்று (செப்டம்பர் 5) 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 376 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட எவரும் இன்று உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிகிச்சைப் பலனின்றி 364 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 934 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.