ETV Bharat / state

கரடு முரடாய் கிடக்கும் சாலை: கண்ணீர் விடும் கிராம மக்கள்!

author img

By

Published : Sep 13, 2019, 9:02 AM IST

Updated : Sep 13, 2019, 11:35 AM IST

தேனி: நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுள்ள ஜம்புலிபுத்தூர் - நரசிங்கபுரம் சாலைப் பணிகளை விரைவாக முடித்து மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் ஆகியோரின் சிரமத்தை தீர்க்க வேண்டுமென நரசிங்கபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

damage road

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது நரசிங்கபுரம். இந்தக் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையே பிரதான தொழிலாகும். நெல், வாழை, தென்னை, பூக்கள் உள்ளிட்டவைகள் அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நரசிங்கபுரத்திலிருந்து ஜம்புலிபுத்தூர் செல்கின்ற சாலையை புதுப்பிப்பதற்காகச் சுமார் 52 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பணிகள் சரிவர செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அச்சாலையில் செல்கின்ற பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் உள்பட பலர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிதாக சாலை அமைப்பதாகக் கூறி ஏற்கனவே சரியாக இருந்த சாலையை பெயர்த்து விட்டனர். புதிதாக சாலை அமைக்கப்படாததால் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் நேரத்திற்கு பள்ளிக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதைவிட அவலமான நிலை என்னவென்றால், அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதிலும் சிக்கலான சூழலை சந்தித்து வருகிறோம், பல உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன என்று சோகத்துடன் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுள்ள ஜம்புலிபுத்தூர் - நரசிங்கபுரம் சாலைப் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை

மேலும், நீண்ட நாட்களாக சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஜம்புலிபுத்தூர் - நரசிங்கபுரம் சாலையை விரைந்து முடித்து மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உள்பட அனைவரின் சிரமத்தை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது நரசிங்கபுரம். இந்தக் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையே பிரதான தொழிலாகும். நெல், வாழை, தென்னை, பூக்கள் உள்ளிட்டவைகள் அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நரசிங்கபுரத்திலிருந்து ஜம்புலிபுத்தூர் செல்கின்ற சாலையை புதுப்பிப்பதற்காகச் சுமார் 52 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பணிகள் சரிவர செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அச்சாலையில் செல்கின்ற பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் உள்பட பலர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிதாக சாலை அமைப்பதாகக் கூறி ஏற்கனவே சரியாக இருந்த சாலையை பெயர்த்து விட்டனர். புதிதாக சாலை அமைக்கப்படாததால் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் நேரத்திற்கு பள்ளிக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதைவிட அவலமான நிலை என்னவென்றால், அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதிலும் சிக்கலான சூழலை சந்தித்து வருகிறோம், பல உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன என்று சோகத்துடன் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுள்ள ஜம்புலிபுத்தூர் - நரசிங்கபுரம் சாலைப் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை

மேலும், நீண்ட நாட்களாக சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஜம்புலிபுத்தூர் - நரசிங்கபுரம் சாலையை விரைந்து முடித்து மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உள்பட அனைவரின் சிரமத்தை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro: ஆண்டிபட்டி அருகே புதிதாக சாலை அமைப்பதற்காக பெயர்க்கப்பட்ட சாலையால் பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் அவதி. பல மாதங்களாக கற்சாலைகளில் பயணித்து வரும் அவலம் குறித்து விவரிக்கிறது இச்செய்தி குறிப்பு நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக.


Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட உட்கடை கிராமம் நரசிங்கபுரம். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் அப்பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய பிரதான தொழிலாகும். நெல், வாழை, தென்னை, பூக்கள் உள்ளிட்ட சாகுபடி அப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நரசிங்கபுரத்திலிருந்து ஜம்புலிபுத்தூர் செல்கின்ற சுமார் 2 கி.மீ சாலையை புதுப்பிப்பதற்காக சுமார் 52 லட்சம் மதிப்பில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் தார் சாலைகளை பெயர்த்து விட்டதோடு சரி, பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அச்சாலையில் செல்கின்ற பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் உள்பட பலர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையே தங்களின் பிரதான தொழிலாகும். புதிதாக சாலை அமைப்பதாக கூறி ஏற்கனவே சரிவர இருந்த சாலையை பெயர்த்து விட்டனர். புதிதாக சாலை அமைக்கப்படாததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றோம். மேய்ச்சலுக்காக செல்கின்ற கால்நடைகள் கற்கள் பெயர்ந்து சாலையில் நடப்பதற்கு சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகின்றன. தோட்ட வேலைக்கு செல்கின்ற விவசாயிகள், விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் கூலியாட்கள் செல்வதில் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு துயரங்களுக்கு ஆளாகின்றோம்.
அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களும் நேரத்திற்கு பள்ளிக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுகின்றன. இதைவிட அவலமான நிலை என்றால், அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதிலும் சிக்கல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நரசிங்கபுரம் எஸ்.ஆர்.பி நகர் பகுதியை சேர்ந்த பால்பாண்டி என்பவரை பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அருகிலுள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு செல்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே இதுபோன்ற உயிர்பலி ஏதும் மேலும் நிகழ்வதற்கு மொழி பெயர்க்கப்பட்ட சாலையை செப்பனிட்டு பணிகளை விரைந்து வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



Conclusion: நீண்ட நாட்களாக சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஜம்புலிபுத்தூர் - நரசிங்கபுரம் சாலையை விரைந்து முடித்து மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உள்பட அனைத்து உயிர்களின் சிரமத்தை தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ஈடிவி பாரத் செய்திகளுக்காக தேனியில் இருந்து சுப.பழனிக்குமார்.

பேட்டி : 1) சிவபாலன் ( கால்நடை வளர்ப்பார், நரசிங்கபுரம்)
2) அன்னலட்சுமி. (விவசாயி, ஜம்புலிபுத்தூர்.)
3) பால்பாண்டி ( விவசாயி, எஸ்.ஆர்.பி நகர்)
Last Updated : Sep 13, 2019, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.