ETV Bharat / state

காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர்...இது மதுரை சம்பவம்! - மதுரை மாவட்டச் செய்திகள்

கோழியை காணவில்லை என்ற சண்டையில் காவலரின் மூக்கை கடித்து ராணுவ வீரர் துப்பிய நிகழ்வு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

army-man-bite-the-police-nose-in-madurai-vadipatti
காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர்...இது மதுரை சம்பவம்
author img

By

Published : Jun 18, 2021, 4:00 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவர், தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். மதுபோதையில் நவநீதகிருஷ்ணன் பக்கத்துவீட்டுக்காரரிடம் கோழியை காணவில்லை என்று நேற்று சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து வாடிப்பட்டி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்றபோது ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் காவலர்களிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வெறியான நவநீதிகிருஷ்ணன், மணிமாறன் என்ற காவலரின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.

காயமடைந்த காவலர் மணிமாறன் தற்போது, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை கைது செய்த வாடிப்பட்டி காவலர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு சென்ற காவலரின் மூக்கை கடித்துத் துப்பிய ராணுவ வீரரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளைஞர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரம்: 22 பேர் மீது வழக்குப் பதிவு!

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவர், தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். மதுபோதையில் நவநீதகிருஷ்ணன் பக்கத்துவீட்டுக்காரரிடம் கோழியை காணவில்லை என்று நேற்று சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து வாடிப்பட்டி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்றபோது ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் காவலர்களிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வெறியான நவநீதிகிருஷ்ணன், மணிமாறன் என்ற காவலரின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.

காயமடைந்த காவலர் மணிமாறன் தற்போது, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை கைது செய்த வாடிப்பட்டி காவலர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு சென்ற காவலரின் மூக்கை கடித்துத் துப்பிய ராணுவ வீரரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளைஞர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரம்: 22 பேர் மீது வழக்குப் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.