மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், ‘அமமுக நிர்வாகி அசோகன் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை நியாயமான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மத்திய அரசு சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்து இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்குச் செல்ல மாட்டார்கள், இலங்கை போரின் போது திமுகவின் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியது.
எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்ற அடிப்படையில் திமுக செயல்படுகிறது. மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மசோதாவில் திருத்தம்வரும். அமமுகவில் பதவியில் இல்லாதவர்களை அதிமுகவில் இணைத்துவருகின்றனர். அதிமுகவின் அச்சுறுத்தலால் சிலர் சேர்கின்றனர். இந்த ஆட்சிக்கு நிச்சயம் அடுத்த தேர்தலில் முடிவு கிடைக்கும்’ என்றார்.
இதையும் படிங்க: 'திமுகவிற்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் பற்றி கவலை இல்லை...!'