ETV Bharat / state

இன்னும் 2 வாரங்களில் காவல் நிலையங்களில் உயர்தர சிசிடிவி கேமரா - அரசு தகவல்!

தமிழ்நாடு காவல் நிலையங்களில் உயர்தர சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளது என அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Mar 1, 2023, 9:18 PM IST

காவல் நிலையங்களில் உயர்தர சிசிடிவி கேமரா- விசாரணை ஒத்திவைப்பு!
காவல் நிலையங்களில் உயர்தர சிசிடிவி கேமரா- விசாரணை ஒத்திவைப்பு!

மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக திடீர்நகர் காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திடீர் நகர் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின்போது காவல் நிலைய கேமரா பதிவு ஆய்வு செய்யப்பட்டபோது நீதிபதி குறிப்பிட்ட பதிவுகள் இல்லை. காவல் நிலைய கேமரா பதிவு வசதியில் 15 நாள்கள் பதிவுகளை மட்டுமே சேமிக்க முடியும் என காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி மதுரை மாநகர் காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. உள்துறை சிறப்புச் செயலர் ஆர்.ஆனந்தகுமார் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தரம் உயர்த்தபட்ட சிசிடிவி கேமரா நிறுவுவதற்கு ரூ.38.35 கோடி மதிப்பிட்டில் 1578 காவல் நிலையங்களில் 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான காட்சிகளை சேமிக்கும் வகையில் திறன் கொண்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணி இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - அன்புமணி ராமதாஸ்

மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக திடீர்நகர் காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திடீர் நகர் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின்போது காவல் நிலைய கேமரா பதிவு ஆய்வு செய்யப்பட்டபோது நீதிபதி குறிப்பிட்ட பதிவுகள் இல்லை. காவல் நிலைய கேமரா பதிவு வசதியில் 15 நாள்கள் பதிவுகளை மட்டுமே சேமிக்க முடியும் என காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி மதுரை மாநகர் காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. உள்துறை சிறப்புச் செயலர் ஆர்.ஆனந்தகுமார் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தரம் உயர்த்தபட்ட சிசிடிவி கேமரா நிறுவுவதற்கு ரூ.38.35 கோடி மதிப்பிட்டில் 1578 காவல் நிலையங்களில் 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான காட்சிகளை சேமிக்கும் வகையில் திறன் கொண்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணி இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.