ETV Bharat / state

'ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தோற்கடிப்போம்' - செல்லூர் ராஜு - Lok sabha election

மதுரை: "ஜெயலலிதாவை ஒருமையில் திட்டிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக தொண்டர்களால் தோற்கடிக்கப்படுவார்" என்று, அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஆண்டி தேவரின் படத்திற்கு மரியாதை செய்த தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்
author img

By

Published : Mar 23, 2019, 11:17 PM IST

பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான மறைந்த ஆண்டித் தேவரின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டித் தேவரின் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, அதிமுகவின் தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், மதுரை வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய தொகுதியில் போட்டியிடாமல் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸைச் சேர்ந்த இளங்கோவன் தேனி மக்களுக்காக எந்த ஒரு பிரச்னையிலும் குரல் எழுப்பவில்லை. அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒருமையில் திட்டிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிமுகவால் தோற்கடிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக கட்சி வேட்பாளர்களும் முன்னணி வேட்பாளர்களும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். மறைந்த ஜெயலலிதாவின் கனவை நினைவாக்குவோம். ஜெயலலிதாவின் புகழை பரப்பி வாக்கு சேகரிப்போம்" என்றார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான மறைந்த ஆண்டித் தேவரின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டித் தேவரின் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, அதிமுகவின் தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், மதுரை வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய தொகுதியில் போட்டியிடாமல் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸைச் சேர்ந்த இளங்கோவன் தேனி மக்களுக்காக எந்த ஒரு பிரச்னையிலும் குரல் எழுப்பவில்லை. அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒருமையில் திட்டிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிமுகவால் தோற்கடிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக கட்சி வேட்பாளர்களும் முன்னணி வேட்பாளர்களும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். மறைந்த ஜெயலலிதாவின் கனவை நினைவாக்குவோம். ஜெயலலிதாவின் புகழை பரப்பி வாக்கு சேகரிப்போம்" என்றார்.




ஆண்டி தேவர் நினைவு தினம்;    தேனி,மதுரை அதிமுக வேட்பாளர்கள் அஞ்சலி*                   பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான மறைந்த ஆண்டி தேவரின் நினைவு நாளான இன்று மதுரை எல்லீஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுகவின் தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் மதுரை வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

 ஈ.வி.கே.இளங்கோவன் டெபாசிட் இழக்க செய்வதற்கு பாடுபடும்வோம்..,

ஜெயலலிதா வை ஒருமையில் திட்டிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிமுக கட்சியினரால் தோற்கடிக்கப்படுவார்...
அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை யில் பேட்டி
 தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் சிறப்பான கூட்டணியாக அதிமுக கூட்டணியை அனைவரும் பேசி வருகிறார்கள் சிறப்பான வெற்றி பெறுவோம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அவருடைய தொகுதியில் அவர் நிற்காமல் தேனி பாராளுமன்றத்தில் நிற்கிறார்கள்


ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி மக்களுக்காக எந்த ஒரு பிரச்சனைக்கும் குரல் எழுப்பவில்லை

தேனி பாராளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் பேட்டி
தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது., அது மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக கட்சி வேட்பாளர்களும் முன்னணி வேட்பாளர்களும்  ஒன்றிணைந்து வெற்றி பெற்று ஜெயலலிதா கனவை நனவாக்க்குவோம்.,

ஜெயலலிதா அவர்களின் புகழை பரப்பி வாக்கு சேகரிப்போம்

தேனி பாராளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.