ETV Bharat / state

மதுரையில் நேற்று ஒரே நாளில் கரோனாவால் 9 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jul 26, 2020, 6:08 AM IST

மதுரை: மாவட்டத்தில் நேற்று (ஜூலை 25) ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

9 killed by corona in madurai
9 killed by corona in madurai

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மதுரை அரசு ராசாசி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கிவருகிறது.

நேற்று (ஜூலை 25) ஒரே நாளில் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 301 பேர் கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 946 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் இதுவரை 9,595 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 7,394 பேர் பூரண நலம் பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது 1,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி மாவட்டத்தில் 202 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மதுரையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இதையும் படிங்க:கோவையில் முழு ஊரடங்கு தொடங்கியதால் சாலையில் கூட்ட நெரிசல்!

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மதுரை அரசு ராசாசி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கிவருகிறது.

நேற்று (ஜூலை 25) ஒரே நாளில் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 301 பேர் கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 946 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் இதுவரை 9,595 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 7,394 பேர் பூரண நலம் பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது 1,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி மாவட்டத்தில் 202 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மதுரையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இதையும் படிங்க:கோவையில் முழு ஊரடங்கு தொடங்கியதால் சாலையில் கூட்ட நெரிசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.