ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் இரு வேறு இடத்தில் விபத்து: ஐந்து பேர் பலி!

author img

By

Published : May 8, 2020, 11:38 PM IST

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே இன்று (மே 8) அதிகாலையில் இரு வேறு இடத்தில் நடந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.

accident
accident

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கப்பல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் பெங்களூரில் உள்ள தனது உறவினரின் ஜவுளி கடையைப் பராமரித்து வருகிறார். இந்நிலையில், இன்று (மே.8) அதிகாலை விக்னேஷ் கப்பல்வாடியைச் சேர்ந்த குப்பன் என்பவரையும், அங்கிநாயனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சென்னையசெட்டி என்பவரையும் பணிக்காக அழைத்து சென்றுள்ளார்.

மூவரும் ஒரே இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் மிட்டபள்ளி அருகே வரும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரும், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரும், சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டி சென்றுள்ளனர்.

இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஒட்டையனூர் என்ற பகுதியில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு வாகனத்தின் டயர்களில் காற்று உள்ளதா என சோதனை செய்துள்ளனர். அந்த சமயம் வேகமாக வந்த கார் மோதியில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் உதவி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த இரு வேறு சாலை விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் விபத்து குறித்து கந்திகுப்பம், சூளகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கப்பல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் பெங்களூரில் உள்ள தனது உறவினரின் ஜவுளி கடையைப் பராமரித்து வருகிறார். இந்நிலையில், இன்று (மே.8) அதிகாலை விக்னேஷ் கப்பல்வாடியைச் சேர்ந்த குப்பன் என்பவரையும், அங்கிநாயனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சென்னையசெட்டி என்பவரையும் பணிக்காக அழைத்து சென்றுள்ளார்.

மூவரும் ஒரே இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் மிட்டபள்ளி அருகே வரும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரும், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரும், சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டி சென்றுள்ளனர்.

இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஒட்டையனூர் என்ற பகுதியில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு வாகனத்தின் டயர்களில் காற்று உள்ளதா என சோதனை செய்துள்ளனர். அந்த சமயம் வேகமாக வந்த கார் மோதியில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் உதவி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த இரு வேறு சாலை விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் விபத்து குறித்து கந்திகுப்பம், சூளகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.