ETV Bharat / state

மாடு வளர்ப்பில் ஆர்வம்காட்டும் எம்.பி.ஏ. பட்டதாரி

கிருஷ்ணகிரி: எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து முன்மாதிரி இளைஞராகத் திகழ்கிறார்.

author img

By

Published : Jan 15, 2020, 11:37 AM IST

ANIMAL HUSBANDRY
ANIMAL HUSBANDRY

கிருஷ்ணகிரி மாவட்டம் கருக்கன் சாவடி கிராமம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ. (MBA) பட்டதாரியான சபரி. இவர் படித்தது என்னவோ எம்.பி.ஏ. என்றாலும், இவரது முழு கவனமும் மாடு வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என இருந்துள்ளது.

இவரது தந்தையான செல்வம், ’உனக்குப் பிடித்த தொழிலை விரும்பி செய், வெற்றியடையலாம்’ என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

இதையடுத்து மாடுகள் வளர்ப்பில் பால்பண்ணை தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் சபரி. பெரும்பாலான மாவட்டத்தில் படித்த இளைஞர் என்றாலே நகரத்திற்கு சென்று வேலையைத் தேடி ஓடும் இந்தக் காலகட்டத்தில், கடந்த ஆறு வருடங்களாக 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால்பண்ணை தொழிலை செய்து ஒரு முன்மாதிரி இளைஞராகச் செயல்படுகிறார் சபரி.

மாடு வளர்ப்பில் ஆர்வம்காட்டும் எம்.பி.ஏ. பட்டதாரி

இதுமட்டுமல்லாமல் நாட்டு மாடுகள், குஜராத்தின் ’கீர்’ வகை மாடுகள், உத்தரப் பிரேதேசம் மாடுகளையும் வாங்கிவளர்த்து சிறந்த சத்துள்ள பாலையும் விநியோகம் செய்கிறார்.

தனது வெற்றி குறித்து இளைஞர் சபரி கூறுகையில், ”மாடு வளர்ப்பு என்பது அரிதான பணியாகிவருகின்றது. தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள இளைஞர்கள், மாடு வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்” என சக இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

இதையும் படிங்க: தருமபுரியில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகள் விற்பனை அமோகம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கருக்கன் சாவடி கிராமம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ. (MBA) பட்டதாரியான சபரி. இவர் படித்தது என்னவோ எம்.பி.ஏ. என்றாலும், இவரது முழு கவனமும் மாடு வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என இருந்துள்ளது.

இவரது தந்தையான செல்வம், ’உனக்குப் பிடித்த தொழிலை விரும்பி செய், வெற்றியடையலாம்’ என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

இதையடுத்து மாடுகள் வளர்ப்பில் பால்பண்ணை தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் சபரி. பெரும்பாலான மாவட்டத்தில் படித்த இளைஞர் என்றாலே நகரத்திற்கு சென்று வேலையைத் தேடி ஓடும் இந்தக் காலகட்டத்தில், கடந்த ஆறு வருடங்களாக 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால்பண்ணை தொழிலை செய்து ஒரு முன்மாதிரி இளைஞராகச் செயல்படுகிறார் சபரி.

மாடு வளர்ப்பில் ஆர்வம்காட்டும் எம்.பி.ஏ. பட்டதாரி

இதுமட்டுமல்லாமல் நாட்டு மாடுகள், குஜராத்தின் ’கீர்’ வகை மாடுகள், உத்தரப் பிரேதேசம் மாடுகளையும் வாங்கிவளர்த்து சிறந்த சத்துள்ள பாலையும் விநியோகம் செய்கிறார்.

தனது வெற்றி குறித்து இளைஞர் சபரி கூறுகையில், ”மாடு வளர்ப்பு என்பது அரிதான பணியாகிவருகின்றது. தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள இளைஞர்கள், மாடு வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்” என சக இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

இதையும் படிங்க: தருமபுரியில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகள் விற்பனை அமோகம்!

Intro:தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்கள் மாடு வளப்பில் ஆர்வம் காட்டவேண்டும்.
எம்.பி.ஏ.படித்துவிட்டு மாடு வளர்பில் ஆர்வம் காட்டி பால்பண்ணை தொழிலில் வெற்றிபெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் வேண்டுகோள்.Body:தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்கள் மாடு வளப்பில் ஆர்வம் காட்டவேண்டும்.
எம்.பி.ஏ.படித்துவிட்டு மாடு வளர்பில் ஆர்வம் காட்டி பால்பண்ணை தொழிலில் வெற்றிபெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் வேண்டுகோள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் கருக்கன் சாவடி கிராமம்.காந்திநகர் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர் சபரி. இவர் படிப்பை முடித்தவுடன் இவரது தந்தை செல்வம் உனக்கு பிடித்த தொழிலை விரும்பி செய். வெற்றியடையலாம் என கூறியுள்ளார். எனவே தனது தந்தையிடம் மாட்டுப்பண்ணை வைக்கிறேன் என்று சபரி அப்பாவிடம் சொல்ல. அவரும் சரிசெய் என்றார்.
தந்தையின் தாராக மந்திரமும். இறைவனின் நல் ஆசியும்தான் தன்னால் இந்த தொழிலில் வெற்றி பெற முடிந்தது என்கிறார்.

பெரும்பாலான மாவட்டத்தில் உள்ள இளைஞர்
டிகிரி படித்தாலே நகரத்திற்கு வேலையை தேடி ஓடும் இந்தக் காலத்தில் கடந்த 6-வருடங்களாக 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால்பண்ணை தொழில் செய்து வருகிறார்.

மாடுகளுக்கு படுக்க ரப்பர் படுக்கை, மின்விசிறி,எப்போதும் குளிச்சியாக இருக்க குளிச்சியான குடில் அமைப்பு,உயர்வகை மாட்டு தீவனங்கள்,வாரத்திற்கு இருமுறை மருத்துவ பரிசோதனை என மாடுகளை குழந்தைகளை போல பார்த்து கொள்கிறார்.

இதுமட்டுமல்லாமல் நாட்டு மாடுகள் மற்றும் குஜராத்தின் கீர் வகை மாடுகள் உத்தர பிரேதேச மாடுகளையும் வாங்கி வளர்த்து சிறந்த சத்துள்ள பாலையும் வினியோகம் செய்கிறார்.

மேலும் மாட்டுப் பண்ணை தொழிலில் வெற்றிபெற்ற இளைஞர் சபரி கூறுகையில் மாடு வளர்ப்பு என்பது அரிதான பணியாகி வருகின்றது.தமிழகத்தில் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் மாடு வளர்ப்பதில் ஆர்வம் காட்டவேண்டும் என்கிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.