ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Dec 25, 2019, 8:37 AM IST

கிருஷ்ணகிரி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுடன் எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

krishnagiri-opp-party-protests-against-on-caa
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுபெற்றுவருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரியில் சுமார் 30 ஜமாத் அமைப்புகள் இணைந்து கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர்.

முன்னதாக கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்ட கண்டனப் பேரணி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு வந்தடைந்தது. அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் சுமார் மூன்றாயிரம் பெண்கள் உட்பட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி கிருஷ்ணகிரியில் பேருந்துகள் மாற்று வழியில் அனுப்பப்பட்டதுடன் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: என்னது 'போரணி'யா - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுபெற்றுவருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரியில் சுமார் 30 ஜமாத் அமைப்புகள் இணைந்து கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர்.

முன்னதாக கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்ட கண்டனப் பேரணி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு வந்தடைந்தது. அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் சுமார் மூன்றாயிரம் பெண்கள் உட்பட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி கிருஷ்ணகிரியில் பேருந்துகள் மாற்று வழியில் அனுப்பப்பட்டதுடன் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: என்னது 'போரணி'யா - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

Intro:கிருஷ்ணகிரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Body:கிருஷ்ணகிரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திலும் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது அதன்படி கிருஷ்ணகிரியில் சுமார் 30 ஜமாத் அமைப்புகள் இணைந்து கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர்.

முன்னதாக கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்ட கண்டன பேரணி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு வந்தடைந்தது. அங்கு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பெண்கள் உட்பட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்தக் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அஸ்லம் பாஷா, இந்திய ஜனநாயக கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைத் தலைவர் அலீம் அல்புஹாரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய துணைத் செயலாளர் அப்துல் பாஸித், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தேசிய துணை செயலாளர் ஹசீனா சையத், பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன பொதுக் கூட்டத்தை ஒட்டி கிருஷ்ணகிரியில் பேருந்துகள் மாற்று வழியில் அனுப்பப்பட்டதுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.