ETV Bharat / state

'அடேய் ஓடுடா ஓடு' - விளைநிலத்தில் புகுந்த காட்டெருமை அட்டகாசம்!

கிருஷ்ணகிரி: விளைநிலத்தில் புகுந்த காட்டெருமை ஒருவரைத் தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

author img

By

Published : Mar 7, 2020, 2:22 PM IST

Updated : Mar 7, 2020, 6:25 PM IST

காட்டெருமை
காட்டெருமை

கிருஷ்ணகிரியில் வனப்பகுதி நிறைந்து காணப்படுவதால் காட்டு விலங்குகள் உணவுக்காகவும், தண்ணீரைத் தேடியும் அடிக்கடி கிராமத்துக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வந்தால் அவற்றை விரட்டுவதும் மக்களுக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்து வருகிறது.

விளைநிலத்தில் புகுந்த காட்டெருமை

இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே மாதேபட்டி கிராமத்தில் முனுசாமி என்பவரின் விவசாய நிலத்தில் காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் காட்டெருமையை விரட்ட முயற்சித்தனர். அப்போது ஒருவரை, காட்டெருமை தூக்கி வீச சிறிது நேரம் அவர் ஃபிளையிங்-இல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர், துரிதமாகச் செயல்பட்டு காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதைப் போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமலிருக்க வனத் துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: மூன்று குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை!

கிருஷ்ணகிரியில் வனப்பகுதி நிறைந்து காணப்படுவதால் காட்டு விலங்குகள் உணவுக்காகவும், தண்ணீரைத் தேடியும் அடிக்கடி கிராமத்துக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வந்தால் அவற்றை விரட்டுவதும் மக்களுக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்து வருகிறது.

விளைநிலத்தில் புகுந்த காட்டெருமை

இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே மாதேபட்டி கிராமத்தில் முனுசாமி என்பவரின் விவசாய நிலத்தில் காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் காட்டெருமையை விரட்ட முயற்சித்தனர். அப்போது ஒருவரை, காட்டெருமை தூக்கி வீச சிறிது நேரம் அவர் ஃபிளையிங்-இல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர், துரிதமாகச் செயல்பட்டு காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதைப் போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமலிருக்க வனத் துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: மூன்று குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை!

Last Updated : Mar 7, 2020, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.