ETV Bharat / state

அடுத்தடுத்து 2 விபத்து: 5 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 28, 2021, 10:28 AM IST

ஒசூர் அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு விபத்துகளால் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

hosur  hosur accident  road accident  car accident  krishnagiri accident  krishnagiri news  krishnagiri latest news  accident news  விபத்து செய்திகள்  விபத்து  சாலை விபத்து  கார் விபத்து  ஓசூரில் கார் விபத்து  கிருஷ்ணகிரி செய்திகள்
accident

கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த மாலூர் சாலையில், ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்தவர்கள் பாகலூரைச் சேர்ந்த அபீத் (21), சையப் (20), தருமபுரியைச் சேர்ந்த பூவரசன் (19) எனத் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மற்றொரு விபத்து

சூளகிரியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஓசூர் பகுதியில் ஒரே நாளில், சாலை விபத்துகளால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - காவல் நிலையம் முற்றுகை

கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த மாலூர் சாலையில், ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்தவர்கள் பாகலூரைச் சேர்ந்த அபீத் (21), சையப் (20), தருமபுரியைச் சேர்ந்த பூவரசன் (19) எனத் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மற்றொரு விபத்து

சூளகிரியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஓசூர் பகுதியில் ஒரே நாளில், சாலை விபத்துகளால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - காவல் நிலையம் முற்றுகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.