ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு!

author img

By

Published : Oct 7, 2020, 7:30 AM IST

கிருஷ்ணகிரி: இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மற்றும் மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தம்பதி
தம்பதி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள மூன்றாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (33). இவருக்கு லதா (28) என்ற மனைவியும், மோகன் என்ற தந்தையும் உள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று(அக்.06) தங்களது கிராமத்தில் இருந்து ஊத்தங்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னப்பநாயக்கனூர் கிராமம் அருகே சென்று கொண்டு இருந்த போது, பின்னால் சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துகுள்ளானது. இவ்விபத்தில் குமார் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த குமாரின் தந்தை மோகன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை- இளைஞர் போக்சோவில் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள மூன்றாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (33). இவருக்கு லதா (28) என்ற மனைவியும், மோகன் என்ற தந்தையும் உள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று(அக்.06) தங்களது கிராமத்தில் இருந்து ஊத்தங்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னப்பநாயக்கனூர் கிராமம் அருகே சென்று கொண்டு இருந்த போது, பின்னால் சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துகுள்ளானது. இவ்விபத்தில் குமார் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த குமாரின் தந்தை மோகன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை- இளைஞர் போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.