ETV Bharat / state

கெலவரப்பள்ளி அணையில் பொங்கும் ரசாயன நுரை.. கிருஷ்ணகிரி விவசாயிகள் வேதனை! - ரசாயனக் கழிவு நுரை

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட நீரில் ரசாயனக் கழிவுகளால் நுரை பொங்கி, துர்நாற்றம் வீசுவதால் வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

அணை நீரில் பொங்கும் ரசாயனக் கழிவு நுரை; விவசாயிகள் வேதனை
அணை நீரில் பொங்கும் ரசாயனக் கழிவு நுரை; விவசாயிகள் வேதனை
author img

By

Published : Dec 12, 2022, 11:34 AM IST

ஓசூர் கெலவரப்பள்ளி அணை

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நேற்று விநாடிக்கு 794 கனஅடிநீர் வரத்தாக இருந்தநிலையில் இன்று விநாடிக்கு 1099 கனஅடிநீர் வரத்து உள்ளது. அணையின் முழுக்கொள்ளளாவன 44.28 அடிகளில் தற்போது 40.18 அடிகள் நீர் உள்ளது. அணையில் இருந்து 820 கனஅடி நீரானது 6 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோர தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக செல்லும் துர்நாற்றம் வீசும் ரசாயன நுரையினால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய பாலாறு தரைப்பாலம்.. ஆபத்தை உணராத பொதுமக்கள்!

ஓசூர் கெலவரப்பள்ளி அணை

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நேற்று விநாடிக்கு 794 கனஅடிநீர் வரத்தாக இருந்தநிலையில் இன்று விநாடிக்கு 1099 கனஅடிநீர் வரத்து உள்ளது. அணையின் முழுக்கொள்ளளாவன 44.28 அடிகளில் தற்போது 40.18 அடிகள் நீர் உள்ளது. அணையில் இருந்து 820 கனஅடி நீரானது 6 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோர தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக செல்லும் துர்நாற்றம் வீசும் ரசாயன நுரையினால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய பாலாறு தரைப்பாலம்.. ஆபத்தை உணராத பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.